முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது

நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது


நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள்; மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு விரும்புகிறது; திரு ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அவைகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு இன்று நடத்தியது. இந்தக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நவம்பர் 29-ம்தேதி தொடங்கி, டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். இந்தக்கூட்டத் தொடரில், 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை தொடர்பான அலுவல் ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் கூறினார். 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்களும் இதில் கொண்டுவரப்படும் என்று கூறிய அமைச்சர், நாடாளுமன்ற விதிமுறைகள் அனுமதிக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக கூறினார்.


அவையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திரு ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.


இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கூட்டம் ஆரோக்கியமான முறையில் நடந்ததைப் பாராட்டினார். நாடாளுமன்றத்தில் அதிக அளவு விவாதம் வேண்டும் என கட்சிகள் தெரிவித்ததைக் கேட்ட அவர், அரசும் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு அர்ஜூன்ராம் மெக்வால், திரு.வி.முரளீதரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


பிஜேபி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஎஸ்பி, டிஆர்எஸ், என்சிபி, சிவசேனா, அஇஅதிமுக, மதிமுக, எஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.


2021 குளிர்கால கூட்டத்தொடரின் போது எடுக்கப்படக்கூடிய மசோதாக்களின் பட்டியல்

சட்டமியற்றும் வணிகம்

போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (திருத்தம்) மசோதா, 2021 (ஒரு கட்டளைக்கு மாற்றாக)

2. தில்லி சிறப்பு காவல் ஸ்தாபனம் (திருத்தம்) மசோதா, 2021 (ஒரு அவசரச் சட்டத்தை மாற்றுவதற்கு)

3. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (திருத்தம்) மசோதா, 2021 (ஒரு கட்டளைக்கு மாற்றாக)

4. அணை பாதுகாப்பு மசோதா, 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

5. வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதா. 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

6. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதா, 2019

7. உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) மசோதா, 2020

8. தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (திருத்தம்) மசோதா, 2021

9. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2021

10. பண்ணை சட்டங்கள் ரத்து மசோதா, 2021

  பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் (திருத்தம்) மசோதா, 2021

12. திவால் மற்றும் திவால் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2021

13. கண்டோன்மென்ட் மசோதா, 2021

14. இண்டர்-சர்வீசஸ் ஆர்கனைசேஷன்ஸ் (கட்டளை, கட்டுப்பாடு & ஒழுக்கம்) மசோதா, 2021

15. இந்திய அண்டார்டிகா மசோதா, 2021

16. குடியேற்ற மசோதா, 2021

17. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய மசோதாவின் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை, 2021

18. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா, 2021

19. வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021

20. இந்திய கடல் மீன்பிடி மசோதா, 2021

21. தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, 2021

22. தேசிய நர்சிங் மருத்துவச்சி ஆணைய மசோதா, 2021

23. மெட்ரோ ரயில் (கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு) மசோதா, 2021

24. எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2021

25. மின்சாரம் (திருத்தம்) மசோதா, 2021

26. தேசிய போக்குவரத்து பல்கலைக்கழக மசோதா, 2021

27. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா,

2021 (உ.பி தொடர்பானது)

28. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா, 2021 (திரிபுரா தொடர்பானது)

29. நபர்களின் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, 2021

30. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 202131. மத்தியஸ்த மசோதா, 2021

32. சுரங்கங்கள் (திருத்தம்) மசோதா, 201 டி (திரும்பப் பெறுவதற்கு)

33. மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2011 (திரும்பப் பெறுவதற்கு

34. கட்டிடம் மற்றும் பிற நுகர்வோர் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2013 (திரும்பப் பெறுவதற்கு)

35. வேலைவாய்ப்பு பரிமாற்றங்கள் (காலியிடங்களின் கட்டாய அறிவிப்பு) திருத்த மசோதா, 2013 (திரும்பப் பெறுவதற்கு)

36. வக்ஃப் சொத்துக்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) மசோதா, 2014 (வாபஸ் பெறுவதற்கு)

11- நிதி வணிகம்

எல். 2021-22க்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் இரண்டாம் தொகுதி மீதான விளக்கக்காட்சி, கலந்துரையாடல் மற்றும் வாக்களித்தல் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்.   


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2021 தொடங்குவதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை

நமஸ்காரம் நண்பர்களே,

நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது.  விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  இந்தியா முழுவதுமுள்ள சாமான்ய மக்கள்,  விடுதலைப் பெருவிழாவின்போது, பொதுநலன் மற்றும் தேசநலன் கருதி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.  இது, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி ஆகும்.  

அண்மையில்,  அரசியல் சாசன தினத்தன்று, அரசியல் சாசனத்தின் உட்கருத்தை புதிய உறுதியுடன் நிறைவேற்ற ஒட்டுமொத்த நாடும் தீர்மானித்துள்ளது.   அந்த வகையில்,  சுதந்திரப் போராட்ட வீரர்களின் மற்றும் விடுதலைப் பெருவிழா உணர்வுகளுக்கேற்ப, நாம் அனைவரும்,  இந்தக் கூட்டத்தொடர் மற்றும் நாடாளுமன்றத்தின் அடுத்தடுத்த கூட்டத்தொடர்களிலும், நாட்டு நலன் தொடர்பான அம்சங்களை விவாதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டுமென நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும்  விரும்புகின்றனர்.   இந்தக் கூட்டத் தொடரில்,  நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன், தொலைநோக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வ விவாதங்கள் இடம்பெற வேண்டும்.  நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும்,  நாடாளுமன்றத்தை வலுக்கட்டாயமாக யார் முடக்குகிறார்கள் என்பதைவிட, அவையின் முக்கியப் பங்களிப்பு பற்றியும் மதிப்பிடப்பட வேண்டும்.  இது மட்டுமே அளவுகோல் அல்ல.  நாடாளுமன்றம் எத்தனை மணி நேரம் செயல்படுகிறது, எந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான அம்சங்கள் நடைபெறுகிறது என்பது தான் அளவுகோலாக இருக்க வேண்டும்.  அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.  அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது.  நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுவதையும், அவையில் அமைதி நிலவ வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். 

அரசின் கொள்கைகளுக்கு எதிரான குரல்கள் வலிமையாக இருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் அவைத்தலைவரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.   இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நமது நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.  கடந்த கூட்டத்தொடருக்குப் பிறகு, நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதுடன், 150 கோடி டோஸ் என்ற எண்ணிக்கையை நோக்கி வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  புதிய வகை உருமாறிய தொற்று குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பத்திரிகையாளர்களாகிய நீங்களும், விழிப்புடன் இருக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில், இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரது ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்.  

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டிலுள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனா காலகட்டத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தனர்.   தற்போது, இத்திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  2.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம், நாட்டு மக்கள் 80 கோடிக்கும் மேற்பட்டோரின் கவலைகளைத் தீர்ப்பதோடு, ஏழைகளின் வீடுகளில் அடுப்பெரியவும் வழிவகுத்துள்ளது.   நாட்டு நலன்கருதி இந்தக் கூட்டத்தொடரில், அனைவரும் ஒருங்கிணைந்து விரைவான முடிவுகளை மேற்கொள்வதுடன்,  சாமான்ய மனிதனின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் நான் நம்புகிறேன்.   இதுவே எனது எதிர்பார்ப்பு.  மிக்க நன்றி. 

பொறுப்பு துறப்பு :  இது, பிரதமர் உரையின் தோராய மொழிபெயர்ப்பு.  மூல உரை இந்தியில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த