முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேமம் (குன்றக்குடி) கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பலர் பாராட்டு

க.சண்முகம்,                                        சிவகங்கை மாவட்டச் செய்தியாளர்:.                      பொருளாதாரத்தில் பின்தங்கிய, நேமம் (குன்றக்குடி) கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பலர் பாராட்டு.!.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், (குன்றக்குடி) நேமம் ஊராட்சி  நேமத்தான்பட்டி (பழையூர்) கிராமத்தில் வசிப்பவர் பிச்சை தாயார் பிரான்சிஸ் மல்லிகா.இவர்களது மகள் கனிமொழி. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் நிர்வாகத்திலுள்ள (அரசு உதவி பெறும்) தருமை கயிலை குருமணி  மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி நீட் தேர்வில் 547 மதிப்பெண்கள் பெற்றார் அதாவது வகுப்பு வாரி நிர்ணயமாகியதை விட  132 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சியடைந்தார்.


பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய உழைப்பு ஊதியம் பெறும் ஏழைக் குடும்பத்தில் தந்தையை இழந்து, தாயாரால்  வளர்க்கப்பட்டவர். கிடைத்த ஆதரவின் மூலமாக மாணவி நீட் பயிற்சி மையங்கள் உதவியின்றி சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார் .


கிராமப்புற மாணவி குன்றக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற கனிமொழி, "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் மற்ற மாணவர்களுக்கு

"நீட்" தேர்வைப் பற்றிய அச்சத்தை மாணவி கனிமொழி  நீக்க காரணமாகவுள்ளார் .

இந்த நிலையில்  தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் சார்பில் குன்றக்குடி திருவண்ணாமலை ஐந்து கோவில் தேவஸ்தானம் ஆதீனகர்த்தார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதினத் திருமடத்திற்கு மாணவியை அழைத்து சால்வை அணிவித்தும்; திருநீருபூசியும் அருளாசி வழங்கி; பழங்கள் கொடுத்து மனதார வாழ்த்தினார்.


மேலும் விபரம் தெரிந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்து  சால்வையணிவித்து வாழ்த்தியதுடன்.உயர் கல்வி கற்க வேண்டிய உதவிகளை  செய்வதாக  தெரிவித்ததுடன் வாழ்த்துக்கள் கூறினார்

சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி அவர்களை மாணவி கனிமொழி, தாயார் அம்மா பிரான்சிஸ் மல்லிகா, மக்கள் தொடர்பு மாவட்ட அதிகாரி பாண்டி, அழைப்பின் பேரில்   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று சந்தித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவரும், மாணவி கனிமொழியை மிகச்சிறந்த திறமை படைத்த மாணவியாக கனிமொழி திகழ்கிறார். இவர் மேலும் பல சாதனைகளை நிச்சயம் புரிவார், அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டிய உதவிகள் செய்யப்படுமென சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மது சூதன் ரெட்டி, மாணவியை உற்சாகப்படுத்தினார். அப்போது மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, பத்திரிகையாளர் நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன், பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் புலித்தேவன் பாண்டியன், உடனிருந்தனர். மேலும்  நேமம் ஊராட்சி மன்றத்  தலைவர் சித்ரா அந்திரி மாணவி கனிமொழிக்கு சால்வை அணிவித்து பகுதி கிராம மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆசிரியர்கள்

பெற்றோரும் சுற்றமும் நண்பர்களும் கிராம மக்களும் மாணவி கனிமொழியை வாழ்த்தினர்.

 தமிழ்நாட்டில்  நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் தலைமையிலான குழுவில் கருத்து பதிவிட்டு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் அந்த நிலையில் இத் தேர்வு தேவையில்லை என்ற மாநில அரசு நிலைப்பாட்டை நாமும் கூறுகிற நிலையில் தற்போது அது நீக்கப்படும் முன்பாக உள்ள நிலையில் மாணவி  கனிமொழி தேர்ச்சி ஒரு அத்தி பூத்த கதை தான்.

உயர்குடி மக்கள் ஆங்கில அறிவு படைத்தவர்கள் "சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் படித்தவர்களால்  வெற்றி பெற முடியும்  என்ற நிலைப்பாடே காரணம், பல பாடத்திட்டம் ஒரே வினாத்தாள் என்ற முறை தான் ஆபத்தான நிலை

தமிழ் வழிக்கல்வியில் குன்றக்குடி என்னும் சிறு கிராமத்தில் பயின்ற பயிற்சி பெறாத மாணவி வெற்றி இது ஒட்டுமொத்த கிராமப்புற மாணவ மாணவிகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதில் வியப்பில்லை. இருந்தும் நீட் தேர்வு தேவையில்லை என்பதே நமது அடித்தள மாணவர்களின் நிலை அப்போது தான் அதிகம் மாணவர்களின் மருத்துவக்கல்விக்கனவு  நிறைவேறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...