இராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஇஅதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளராக இருந்த அன்வர்ராஜாவை அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள் அறிக்கையில்:-
சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக உள்ள அன்வர் ராஜா கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரை எதிர்த்த மேயர் மதுரை முத்துவிற்கு அந்தக் காலத்தில் சுங்கடிச் சேலை வாங்கி பார்சலில் அனுப்பியவர் தான் இந்த அன்வர் ராஜா
1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருபவராவார். மண்டபம் ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய சேர்மன் என்று ஆரம்ப காலம் தொட்டு இருந்தவர் மாறாத கட்சி விசுவாசம் கொண்ட தொண்டராக கட்சியில் இன்றுவரை இருந்து கட்சி பிளவுபட்ட போதும் ஜெயலலிதா பின் நின்று சட்டமன்ற உறுப்பினர் , பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அமைச்சரவையில் அமைச்சர் , ஆட்சி மன்றக் குழ உறுப்புனர் என்று பல பொறுப்புகளில் இருந்து கட்சிக்காக மூத்த நிர்வாகியாக இருந்த அன்வர் ரஜாவை நீக்கும் நிலையில் கட்சியின் வளர்ச்சி இனி கேள்விக்குறியாகவே தற்போது அதன் உண்மையான தொண்டர்களால் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்