முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2021 முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2021 முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள்


இந்தியாவிலும் அதே போல் உலகம் முழுவதிலும்  உருவான கொவிட்-19 பெருந்தொற்றினை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நுண்கிருமிகள் பற்றியும், நோய் பற்றியும் இதன் நீண்ட கால தாக்கங்கள் பற்றியும் பொது சுகாதார கருவிகள், பரிசோதனைகள், சிகி்ச்சைகள், தடுப்பூசிகள் பற்றியுமான ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.


 2021 மார்ச்-மே மாதங்களில் கொவிட்-19 கடுமையாக அதிகரித்தது. இந்தியாவின் அனுபவமாக இருந்தது. இருப்பினும் 2021 மே மாதத்திற்கு பின் கணிசமான அளவு இது குறைந்ததை காண முடிந்தது. 2021 டிசம்பர் 17 நிலவரப்படி 5 மாநிலங்களில் (கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா) நாட்டில் மொத்தம் சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்திற்கு நெருக்கமாக  நோயாளிகள் இருந்தனர். இதே காலத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் நோயாளிகள் எண்ணிக்கை 25,158 ஆகவும், 10 லட்சம் மக்கள் தொகையில் இறப்பு எண்ணிக்கை  345 ஆகவும் இருந்தது. இது உலக நிலையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவானவற்றில் ஒன்றாகும்.


இந்த பெருந்தொற்றினை சமாளிக்க மிகவும் தேவைப்பட்ட வலுவான, தீர்க்கமான தலைமைத்துவத்தை மாண்புமிகு பிரதமர் வழங்கி, வழிகாட்டினார். பிரதமர் அலுவலகமும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடின. இதில் தயார் நிலை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  மேம்படுத்துவதற்கு தேவையான பகுதிகளை அடையாளம் காணுதல், ஒருங்கிணைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டன செயலாளர்களின் குழு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது.


 2021-ல் மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் 118 காணொலி காட்சி கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.


கடந்த காலத்தில் பெருந்தொற்றுகளையும், தொற்று நோய்களையும் வெற்றிகரமாக கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் தேவையான உத்திகள், திட்டங்கள், நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. கட்டுப்பாட்டு திட்டங்கள், நடத்தை மற்றும் சமூக உளவியல், சுகாதாரம், கண்காணிப்பு, பரிசோதனை கூட ஆதரவு, மருத்துவமனை உள்கட்டமைப்பு, மருத்துவ முழுகவச உடைகளின் சீரான பயன்பாடு போன்றவை இவற்றில் அடங்கும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை கூடங்களின் வலைப்பின்னல் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்ட நிலையில் 2022 ஜனவரி 1 நிலவரப்படி 1364 அரசு பரிசோதனை கூடங்களும், 1753 தனியார் பரிசோதனை கூடங்களும் கொவிட்-19 பரிசோதனையை நடத்துகின்றன. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் வரையிலான ரத்த மாதிரிகள் இந்தியாவில் பரிசோதிக்கப்படுகின்றன.


2021 டிசம்பர் 17 நிலவரப்படி கொவிட் சிகிச்சைக்காக மொத்தம் 23,680 மருத்துவமனைகள் செயல்பட்டன. இவற்றில் (4,94,720 ஆக்சிஜன் வசதி கொண்டது உட்பட) 18,12,017 தனிப்படுத்தப்படும் படுக்கைகளும் (65,397 வென்டிலேட்டர் வசதி கொண்டது உட்பட) 1,39,423 ஐசியூ படுக்கைகளும் உள்ளன.


 மாநிலங்களுக்கான நிதியுதவியை பொருத்தவரை 2020-21-ல் கொவிட்-19 அவசரகால பணிகள் மற்றும் சுகாதார தயார் நிலை நடைமுறைக்கான திட்டங்களுக்கு ரூ. 8257.88 கோடி விடுவிக்கப்பட்டது.

 கொவிட்-19 –ன் எதிர்கால அதிகரிப்பை கட்டுப்படுத்தும்  திறனுக்கு தயாராவது மற்றும் பொது சுகாதார அவசர தேவைகளுக்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார அடிப்படை கட்டமைப்பு இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 தடுப்பூசி இயக்கத்தின் செயல்பாட்டை விரைவுப்படுத்த வீடு வீடாக சென்று தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 நவம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ கல்வியை பொருத்தவரை வரலாற்று சிறப்புமிக்க தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதையடுத்து 2020 செப்டம்பர் 25-ல் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு 1956-ன் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

2014-ல் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் 2021-ல் 88,120 ஆக அதிகரிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களும், 2014-ஐ விட (30,185) 78 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 2021-ல் 55,595 இடங்களாக அதிகரித்தன. நாட்டில் புதிதாக 209 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு தற்போது அவற்றின் எண்ணிக்கை 596 (அரசு 313, தனியார் 283) ஆக உள்ளன.

 பல் மருத்துவ கல்வி முறையை உலகத்தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கு தேசிய பல் மருத்துவ மசோதா நகல் தயாரிக்கப்பட்டு, மாநில அரசுகள், பொது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்டோரின் கருத்துக்களுக்காக 28.1.2020 அன்று பொது வெளியில் வெளியிடப்பட்டது. 2372 கருத்துக்கள் வரப்பெற்றன. இவை பல்மருத்துவ நிபுணர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு உரியமுறையில் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மசோதா தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...