முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2021 முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2021 முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள்


இந்தியாவிலும் அதே போல் உலகம் முழுவதிலும்  உருவான கொவிட்-19 பெருந்தொற்றினை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நுண்கிருமிகள் பற்றியும், நோய் பற்றியும் இதன் நீண்ட கால தாக்கங்கள் பற்றியும் பொது சுகாதார கருவிகள், பரிசோதனைகள், சிகி்ச்சைகள், தடுப்பூசிகள் பற்றியுமான ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.


 2021 மார்ச்-மே மாதங்களில் கொவிட்-19 கடுமையாக அதிகரித்தது. இந்தியாவின் அனுபவமாக இருந்தது. இருப்பினும் 2021 மே மாதத்திற்கு பின் கணிசமான அளவு இது குறைந்ததை காண முடிந்தது. 2021 டிசம்பர் 17 நிலவரப்படி 5 மாநிலங்களில் (கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா) நாட்டில் மொத்தம் சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்திற்கு நெருக்கமாக  நோயாளிகள் இருந்தனர். இதே காலத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் நோயாளிகள் எண்ணிக்கை 25,158 ஆகவும், 10 லட்சம் மக்கள் தொகையில் இறப்பு எண்ணிக்கை  345 ஆகவும் இருந்தது. இது உலக நிலையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவானவற்றில் ஒன்றாகும்.


இந்த பெருந்தொற்றினை சமாளிக்க மிகவும் தேவைப்பட்ட வலுவான, தீர்க்கமான தலைமைத்துவத்தை மாண்புமிகு பிரதமர் வழங்கி, வழிகாட்டினார். பிரதமர் அலுவலகமும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடின. இதில் தயார் நிலை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  மேம்படுத்துவதற்கு தேவையான பகுதிகளை அடையாளம் காணுதல், ஒருங்கிணைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டன செயலாளர்களின் குழு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது.


 2021-ல் மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் 118 காணொலி காட்சி கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.


கடந்த காலத்தில் பெருந்தொற்றுகளையும், தொற்று நோய்களையும் வெற்றிகரமாக கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் தேவையான உத்திகள், திட்டங்கள், நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. கட்டுப்பாட்டு திட்டங்கள், நடத்தை மற்றும் சமூக உளவியல், சுகாதாரம், கண்காணிப்பு, பரிசோதனை கூட ஆதரவு, மருத்துவமனை உள்கட்டமைப்பு, மருத்துவ முழுகவச உடைகளின் சீரான பயன்பாடு போன்றவை இவற்றில் அடங்கும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை கூடங்களின் வலைப்பின்னல் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்ட நிலையில் 2022 ஜனவரி 1 நிலவரப்படி 1364 அரசு பரிசோதனை கூடங்களும், 1753 தனியார் பரிசோதனை கூடங்களும் கொவிட்-19 பரிசோதனையை நடத்துகின்றன. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் வரையிலான ரத்த மாதிரிகள் இந்தியாவில் பரிசோதிக்கப்படுகின்றன.


2021 டிசம்பர் 17 நிலவரப்படி கொவிட் சிகிச்சைக்காக மொத்தம் 23,680 மருத்துவமனைகள் செயல்பட்டன. இவற்றில் (4,94,720 ஆக்சிஜன் வசதி கொண்டது உட்பட) 18,12,017 தனிப்படுத்தப்படும் படுக்கைகளும் (65,397 வென்டிலேட்டர் வசதி கொண்டது உட்பட) 1,39,423 ஐசியூ படுக்கைகளும் உள்ளன.


 மாநிலங்களுக்கான நிதியுதவியை பொருத்தவரை 2020-21-ல் கொவிட்-19 அவசரகால பணிகள் மற்றும் சுகாதார தயார் நிலை நடைமுறைக்கான திட்டங்களுக்கு ரூ. 8257.88 கோடி விடுவிக்கப்பட்டது.

 கொவிட்-19 –ன் எதிர்கால அதிகரிப்பை கட்டுப்படுத்தும்  திறனுக்கு தயாராவது மற்றும் பொது சுகாதார அவசர தேவைகளுக்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார அடிப்படை கட்டமைப்பு இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 தடுப்பூசி இயக்கத்தின் செயல்பாட்டை விரைவுப்படுத்த வீடு வீடாக சென்று தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 நவம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ கல்வியை பொருத்தவரை வரலாற்று சிறப்புமிக்க தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதையடுத்து 2020 செப்டம்பர் 25-ல் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு 1956-ன் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

2014-ல் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் 2021-ல் 88,120 ஆக அதிகரிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களும், 2014-ஐ விட (30,185) 78 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 2021-ல் 55,595 இடங்களாக அதிகரித்தன. நாட்டில் புதிதாக 209 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு தற்போது அவற்றின் எண்ணிக்கை 596 (அரசு 313, தனியார் 283) ஆக உள்ளன.

 பல் மருத்துவ கல்வி முறையை உலகத்தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கு தேசிய பல் மருத்துவ மசோதா நகல் தயாரிக்கப்பட்டு, மாநில அரசுகள், பொது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்டோரின் கருத்துக்களுக்காக 28.1.2020 அன்று பொது வெளியில் வெளியிடப்பட்டது. 2372 கருத்துக்கள் வரப்பெற்றன. இவை பல்மருத்துவ நிபுணர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு உரியமுறையில் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மசோதா தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த