சட்டக்கல்லூரி மாணவர் உட்பட மூவர் நீரில் மூழ்கிப் பலி
திண்டுக்கல் அருகே சட்டக்கல்லுாரி மாணவர் தங்கபாண்டி (வயது 21) மற்றும் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த் கருப்பன் மகன் தங்கபாண்டி. மதுரை சட்டக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்றுவிடுமுறை நாளில் திண்டுக்கல்லிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். வாழைக்காய்ப்பட்டி அருகே தடுப்பணையில் உறவினருடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தங்கபாண்டி நீரில் மூழ்கினார். உறவினர்கள் காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.
தங்க பாண்டி நீரில் மூழ்கி பலியானார். மேலும் திண்டுக்கல் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் ஹரீஷ் (வயது 15), பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வில்லியம் மகன் ரிச்சர்ட் (வயது 14). ஒன்பதாம் வகுப்பு மாணவர். இருவரும் அருகிலுள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர். தண்ணீருக்குள் தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கிப் பலியாகினர். ஒரே நாளில் நிகழ்ந்த இருவேறு சம்பவங்கள் திண்டுக்கல் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. தாலுகா காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்