தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 2 மற்றும் 2-A தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.
குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார். அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான http://www.tnpsc.gov.in/ http://www.tnpscexams.net/ http://www.tnpscexams.in இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
டிஎன்பிஎஸ்சி அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் எனப்படும் ஒருமுறைப்பதிவு கட்டாயமாகும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன், அதில்பதிவு செய்வது அவசியம். இதனை, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமாகக் கருதமுடியாது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வு நடைபெறும் தேதி, வினாத்தாள் அமைப்பு விபரம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது-
பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல்- மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2, மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும்.நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ரோஸ்டர் முறையில் தேர்வு செய்து நேர்முகத் தேர்வு நடைபெறும் இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுகள், இனி மேல் காலை 9.30 மணிக்குத் தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் வேலையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடத்தத் திட்டம். நேர்முக தேர்வு அல்லாத பதவிக்கான கலந்தாய்வு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 17 சப் ரிஜிஸ்டர் பதவிகளும், தொழிலாளர் நலத்துறையில் 19 இடங்களும், 58 காலிப்பணியிடங்கள் Assitant Special Branch-ல் ( சிறப்பு கிளை உதவியாளர்) முதல் முறையாக காவல் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது. 115 மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இனி அரசு நிறுவனத்தின் கழகங்கள் மற்றும் வாரியத்திற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் டி.என்.எஸ்.பி.எஸ்.சி நடத்தும். பணி விவரங்களை வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 3 ஆம் தேதி இது குறித்த விவரங்கள் வெளியிடப்படும். தமிழ் வழி வினாத்தாளில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்வதற்கு நிபுணர்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது, பிழைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கு 9 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட இதர வாரிய பணியிடங்களை குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளில் வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் மாதம் 3 ஆம் தேதி அதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள்