சூத்திரனாக சத்திரியனாக இருப்பது எத்தனை எளிது. நாமமும் போடலாம். பட்டையும் போடலாம். எல்லா பிரிவுகளின் படி பூசை செய்யலாம்.
சரி இராமநுசர் வடகிளையா, தென்கிளையா? இது வைணவ வினா
பிரதமர் நரேந்திரமோடி போட்டிருப்பது தென்கிளை. ராமம் காஞ்சிபுரம் மாணவர்கள் தென்கலை அது (மூக்கைத்தொடுவது)
திருவரங்கம் மாணவர்கள் வடகலை அது வளைவு உள்ளது. இராமானுஜர் காலத்தில் பாடசாலையில் பரிந்துரை செய்யப்பட்டது... பின்னர்... வேதாந்த தேசிகர் காலத்தில்... ஆதரிக்கப்பட்டது...
ஆகமங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது... இவற்றை விட... சாதி இரண்டொழிய வேறில்லை.. சாற்றுங்.......நீதி வழுவாமல் நெறிமுறை என உரைத்தவன் தான் மஹாகவி உளரலின் ஆரம்பம்... திருஅல்லிக்கேணி.... அங்கே தான் இராமானுசன் தோன்ற வேள்வி நடந்தவிடம் அதுவும் ஒன்றாகும்...
சாதி ஒழிப்பு தோன்றக் காரணமான இராமானுசன்.... துளசிங்கப்பெருமாள்... சுவாமி விவேகானந்தர்... சகோதரி நிவேதிதை... மகாகவி பாரதியார்... வாழியவே...இது தமிழ் நாட்டில்... இப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இந்துமத வைணவத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான
சிலை ரூபாய்.1000 கோடியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்து வைணவத் துறவியான ராமானுஜர் என்கிற ராமானுஜ சாரியா, தமிழகத்தில் பிறந்தவர். கருணைக்கடல் என்று அழைக்கப்படுயவர், உலகமெங்கும் சமத்துவம் பரவப் பாடுபட்டவர்.
இவருக்கு, ஹைதராபாத் அருகே ஷாம்ஷாபாத் விமான நிலையமருகே 216 அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வெண்கலத்தில் சிலை நிறுவப்பட்டது.
2016 ஆம் ஆண்டு துவங்கிய இப் பணிகள், தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றது. உலகிலேயே இரண்டாவது பெரிய சிலையாக இது கருதப்படுகிறது. தாய்லாந்தில் 302 அடி உயரமுள்ள புத்தர் சிலையே, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கிறது.
இராமானுஜ சாரியாவின் சிற்பம், மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் உள்ள இராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாக குழுவிலுள்ள தேவானந்த ராமானுஜா ஜீயர் தெரிவித்தார்.
11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான இராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்ட சிலை ஹைதராபாத் நகரில் ஷம்ஷாபாத் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சமத்துவத்துக்கான சிலை (Statue of Equality) என இந்தச் சிலை போற்றப்படுகிறது.
இதனை நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களை பயன்படுத்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர்.
இந்த சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள்