இன்று ஒரேநேரத்தில் 3 ஊழல் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் சோதனை.
தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் சோதனை.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், எல்.இ.டி., விளக்குகள் அமைத்ததில், 1 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அதிகாரிகள் மூன்று பேர், மின் சாதன பொருட்களை வினியோகித்த இரு நிறுவனங்கள் மீது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 2016 - 17 ஆம் நிதியாண்டில், நான்கு இடங்களில் மின் விளக்குகள் அமைக்க 1.33 கோடி ரூபாயும், 2017 - 18 ஆம் நிதியாண்டில், 63 இடங்களில் உயர் கோபுரத்துடன் கூடிய எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்க, 4.15 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. நாளிதழ்களில் விளம்பரம் செய்தல் உட்பட, எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை. அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்யவில்லை.
சந்தை விலையை விட, 50 சதவீதம் கூடுதல் விலைக்கு விளக்குகள் கொள்முதல் செய்யப் பட்டது குறித்து எழுந்த புகார்படி, இலஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் விசாரித்தனர்.
இதில், 1.01 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது தெரிந்ததையடுத்து, அப்போது பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த ஆனந்தன், மதலைமுத்து, ஜெயராமன்,
விளக்கு வினியோகித்த சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த 'ஸ்கை டிரேடர்ஸ்' இயக்குனர் மதிவாணன், தர்மபுரி மாவட்டம், இருளப்பட்டியைச் சேர்ந்த 'குமார் எலக்ட்ரிக்கல்ஸ் அண்ட் ஹார்டுவேர்ஸ்' இயக்குனர் குமார் ஆகியோர் மீது,
மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது சோதனை நடத்தினர்.
கருத்துகள்