தேசிய திறந்தநிலைப் பள்ளியில் லாஜிஸ்டிக் மேலாண்மை கற்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய திறந்தநிலைப் பள்ளி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் (LSC) உடன் இணைந்து உயர்நிலை மற்றும் மேல் நிலைகளில் ஐந்து படிப்புகள் கற்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதன்படி லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் பயிற்சி மையங்கள் மூலம் தேசிய திறந்தநிலைப் பள்ளி விதிமுறைகளின்படி இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஐந்து படிப்புகளில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் கிடங்குகள் மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவை உயர்நிலை வகுப்பில் கற்பிக்கப்பட உள்ளன. மேலும், போக்குவரத்து & கிடங்கு மேலாண்மை, சரக்கு மேலாண்மை மற்றும் அடிப்படை போக்குவரத்து ஆகியவை மேல்நிலை வகுப்பில் கற்பிக்கப்பட உள்ளன.
லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் ஆனது இந்திய தொழில்களின் கூட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு தொழில் சார்ந்த வேலைகளில் இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது
.
இந்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் முன் முயற்சியான பயிற்சி மையங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குதல் என்னும் இலக்கை அடைய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இத்தகவல் தேசிய திறந்தநிலைப் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்