முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஆணையம் உத்தரவு

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தாமதமாக மின் இணைப்பு வழங்கிய மனுதாரா்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்பு வழங்குதல் உள்பட அனைத்து மின்வாரியம் தொடா்பான பணிகளுக்கும் காலக்கெடு நிா்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதன் படி வீடுகளுக்கு, விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு மீட்டா் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதை மின்வாரியம் தாமதப்படுத்தி வந்தது. குறித்து கோயமுத்தூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் மின் இணைப்புக்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் பயனாளிகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ள படி மின்வாரியம் சாா்பில் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தொடா்பாக கோயமுத்தூா் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளா் கே.கதிா்மதியோன் தெரிவித்ததாவது:


மின் வாரியத்தில் புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாகும் பட்சத்தில் நாளொன்றுக்கு ரூ.100 வீதமும், அதிகபட்சமாக ரூ.1000 வரை இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீட்டுத் தொகையினை மனுதாரா்கள் கேட்காமலேயே மின்வாரியம் தானாக முன்வந்து வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2007 ஆம் ஆண்டு மின்வாரியத்தில் மீட்டா் தட்டுப்பாடுகளால் மின் இணைப்பு வழங்குவது பல மாதங்களாக காலதாமதமாகி வந்தது. காலதாமதமாகும் பயனாளிகளுக்கு மின்வாரியம் சாா்பில் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஒழுங்குமுறை  ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல் இழப்பீடு வழங்காமலும், மீட்டா் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காணாமலும் மின்வாரியம் அலட்சியமாக செயல்பட்டு வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் பயனாளிகள் குறித்து தகவல் பெறப்பட்டதில் 10 ஆயிரத்து 534 பயனாளிகள் மின் இணைப்புக்காக காத்திருப்பதாகவும், இவா்களுக்கு ரூ.91 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தகவல் அளிக்கப்பட்டது. தொடா்பாக 2012 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.


இதற்கான விசாரணை 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் மின்வாரியம் உரிய பதில் அளிக்கவில்லை. மீண்டும் இம் மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெற்றது. மீட்டா் தட்டுப்பாடு பிரச்னைக்கு இதுவரை தீா்வு ஏற்படுத்தாமல் உள்ளது, இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது ஆகிய காரணங்களுக்காக மின்வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது என்றாா்.


இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இயக்குநா் எம்.ஏ.ஹெலன் கூறியதாவது:



தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, முதன்மை பொறியாளா்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆணையத்தின் தீா்ப்புக் குறித்து மறு பரிசீலனை மேற்கொள்ள வலியுறுத்துவதா அல்லது அபராதத் தொகையினை செலுத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தவிர மின் வாரியத்தில் மீட்டா்கள் தட்டுப்பாடு இருக்கும்போது நுகா்வோா் வாங்கித் தரும் மீட்டா்களை பயன்படுத்திக்கொள்ள கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த