மியான்மரின் (பர்மா) முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்கில் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இராணுவம், ஜனநாயக அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தது.
இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆங் சான் சூகி திடமாகவே மறுத்தார். ஆனாலும் மியான்மர் நீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்குகளின் ஆங் சான் சூகிக்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்தத் தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ஊழல் வழக்கு ஒன்றில் ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி, தனது சக அரசியல் தலைவரிடமிருந்து தங்கமும், ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் மொத்தம் 11 ஆண்டுகள் ஆங் சான் சூகி சிறைத் தண்டனை அனுபவிக்க உள்ளார்.
இன்னும் 10-க்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகி மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. மியான்மரின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் அதிகப்பட்சமாக 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் நிலையில் ஆங் சான் சூகி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தற்போது 76 வயதாகும் நிலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்படலாம். மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஆங் சான் சூகி. 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
ஆங் சான் சூகிக்கு இரண்டு வயதான போது அவரது தந்தை, பர்மா நாட்டின் பிரதமராக இருந்தார் . 1960 ஆம் ஆண்டு வரை பர்மாவில் பள்ளிகளில் பயின்றார், அப்போது அவரது தாயார் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார் . இந்தியாவில் மேற்படிப்புக்குப் பிறகு, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார் , அங்கு அவர் கணவரான பிரிட்டிஷ் அறிஞரான மைக்கேல் ஆரிஸுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. 1988 ஆம் ஆண்டு வரை மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார், அவர் தனது கணவர் மற்றும் மகன்களை விட்டுவிட்டு இறக்கும் தருவாயில் தாயைக் காண்பதற்கு பர்மாவுக்குத் திரும்பினார். அங்கு இராணுவ பலம் வாய்ந்த யு நே வினின் மிருகத்தனமான மற்றும் பதிலளிக்காத ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதால், அவருக்கு எதிராக அவர் பேசுவதற்கும் அகிம்சை போராட்டத்தை தொடங்குவதற்கும் வழிவகுத்தது. அந்த நாட்டில் 2017-18-ம் ஆண்டில் யாங்கூன் முன்னாள் முதல்வர் பையோ மின் தீனிடமிருந்து 6 லட்சம் டாலர் மற்றும் ஏழு தங்கக் கட்டிகளை லஞ்சமாகப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், சூகிக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மியான்மர் சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்தது. மேலும் அவர்மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்