முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரை

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வழங்கினார்

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, குழந்தைகள் தங்கள் விருப்பப்படி எந்த கலை வடிவத்தையும் கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இன்று அழைப்பு விடுத்தார். மீண்டும் நமது வேர்களுக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்திய சமூகத்தில் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அறைகூவல் விடுத்தார்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகத்தால் பொம்மலாட்டம் போன்ற நமது வளமான பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்கள் மறைந்து வருவதாக அவர் கூறினார். அரசுகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் தீவிர ஈடுபாட்டுடன் அவை புத்துயிர் பெற வேண்டும். சிறுவயதிலேயே படைப்பாற்றல் மற்றும் கலையறைவை குழந்தைகள் பெறுவது தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவும் என்பதைக் குறிப்பிட்ட திரு நாயுடு, கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கலைப் பாடங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று வழங்கினார். நாடகக் கலை மற்றும் நுண்கலைத் துறையில் பங்காற்றிய பல்வேறு கலைஞர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.விடுதலையின் அமிர்தப் பெருவிழா' கொண்டாட்டங்களைப் பற்றி குறிப்பிடுகையில், அதிகம் அறியப்படாத நாயகர்கள் பலர் நமது சுதந்திரத்திற்காக தியாகங்களைச் செய்தார்கள், ஆனால் அவர்கள் மீது நமது வரலாற்று புத்தகங்களில் போதுமான கவனம் செலுத்தப்படாததால், அவர்களின் கதைகள் பெரும்பாலும் மக்களுக்குத் தெரியவில்லை என்று திரு நாயுடு கூறினார். இந்த சிதைவுகளை சரிசெய்து, சுதந்திரப் போராட்டத்தின் போது அதிகம் அறியப்படாத இந்த மாவீரர்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தி உணர்வுகளைத் தூண்டுவதில் காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் பங்கை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையின் கதைகளை திறம்படச் சொல்வதற்கு கலை "சக்திவாய்ந்த அரசியல் ஆயுதமாக" பயன்படுத்தப்பட்டது என்றார். ரவீந்திரநாத் தாகூர், சுப்ரமணிய பாரதி, காசி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியோரின் தேசபக்தி மிளிரும் பாடல்களும் கவிதைகளும் மக்களிடையே தேசியவாதத்தின் வலுவான உணர்வுகளை எவ்வாறு தூண்டியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். "சக்திவாய்ந்த கலை வெளிப்பாட்டின் மூலம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு நமது சுதந்திரப் போராட்டத்திற்கு இன்றியமையாதது, அதை மறந்துவிடக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.


"நமது செழுமையான கடந்த காலத்தை நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைக்கும் தொடர்ச்சியின் இழையை வலுப்படுத்துவதில்" கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டிய திரு நாயுடு, நமது மகத்தான கலாச்சார மரபுகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறினார். தேசத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்து நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் காட்சி மற்றும் நிகழ்த்து கலைகளைப் பாதுகாக்க அவர் அழைப்பு விடுத்தார்.


மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமியின் தலைவர், திருமதி உமா நந்தூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.iகுழந்தைகள் விரும்பும் கலைகளைக் கற்க பள்ளிகளும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் தேர்வு செய்யும் எந்தவித கலையையும் கற்பதற்கு அவர்களைப் பெற்றோரும், பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

62-வது தேசிய கண்காட்சி கலை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்.

மேல்நாட்டு கலாச்சாரம் காரணமாக நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகள் மறைந்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய கலைகளுக்கு அரசுகளும், சமுதாயமும் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, வெளியில் தெரியாத ஏராளமானோர் விடுதலைக்காக பாடுபட்ட போதிலும், அவர்களைப் பற்றி வரலாற்று நூல்கள் அதிக கவனம் செலுத்தாததால், மக்களுக்கு அவர்களைப் பற்றி தெரியவில்லை என்று கூறினார். இந்த வேறுபாட்டைக் களைய அவர்களது போராட்டம் பற்றி வெளியில் தெரியுமாறு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ரவீந்திர நாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி, காஸி நஸ்ருல் இஸ்லாம், பங்கிம் சந்திர சாட்டர்ஜி தங்களது தேசபக்தி பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதை அவர் நினைவுகூர்ந்தார். கலைஞர்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்ட அவர், வளமையான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் இணைக்கும் இழையாக அவர்களது கலை இருந்தது எனக்குறிப்பிட்டார். கலை மக்களை ஒற்றுமைப்படுத்தும் சாதனம் என்று கூறிய திரு நாயுடு, நமது வளமையான கலாச்சார பாரம்பரியங்களையும், பல்வேறு வகையிலான கலைகளையும் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடியின் தலைவர் திருமதி உமா நந்தூரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த