முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரை

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வழங்கினார்

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, குழந்தைகள் தங்கள் விருப்பப்படி எந்த கலை வடிவத்தையும் கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இன்று அழைப்பு விடுத்தார். மீண்டும் நமது வேர்களுக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்திய சமூகத்தில் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அறைகூவல் விடுத்தார்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகத்தால் பொம்மலாட்டம் போன்ற நமது வளமான பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்கள் மறைந்து வருவதாக அவர் கூறினார். அரசுகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் தீவிர ஈடுபாட்டுடன் அவை புத்துயிர் பெற வேண்டும். சிறுவயதிலேயே படைப்பாற்றல் மற்றும் கலையறைவை குழந்தைகள் பெறுவது தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவும் என்பதைக் குறிப்பிட்ட திரு நாயுடு, கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கலைப் பாடங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று வழங்கினார். நாடகக் கலை மற்றும் நுண்கலைத் துறையில் பங்காற்றிய பல்வேறு கலைஞர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.விடுதலையின் அமிர்தப் பெருவிழா' கொண்டாட்டங்களைப் பற்றி குறிப்பிடுகையில், அதிகம் அறியப்படாத நாயகர்கள் பலர் நமது சுதந்திரத்திற்காக தியாகங்களைச் செய்தார்கள், ஆனால் அவர்கள் மீது நமது வரலாற்று புத்தகங்களில் போதுமான கவனம் செலுத்தப்படாததால், அவர்களின் கதைகள் பெரும்பாலும் மக்களுக்குத் தெரியவில்லை என்று திரு நாயுடு கூறினார். இந்த சிதைவுகளை சரிசெய்து, சுதந்திரப் போராட்டத்தின் போது அதிகம் அறியப்படாத இந்த மாவீரர்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தி உணர்வுகளைத் தூண்டுவதில் காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் பங்கை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையின் கதைகளை திறம்படச் சொல்வதற்கு கலை "சக்திவாய்ந்த அரசியல் ஆயுதமாக" பயன்படுத்தப்பட்டது என்றார். ரவீந்திரநாத் தாகூர், சுப்ரமணிய பாரதி, காசி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியோரின் தேசபக்தி மிளிரும் பாடல்களும் கவிதைகளும் மக்களிடையே தேசியவாதத்தின் வலுவான உணர்வுகளை எவ்வாறு தூண்டியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். "சக்திவாய்ந்த கலை வெளிப்பாட்டின் மூலம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு நமது சுதந்திரப் போராட்டத்திற்கு இன்றியமையாதது, அதை மறந்துவிடக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.


"நமது செழுமையான கடந்த காலத்தை நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைக்கும் தொடர்ச்சியின் இழையை வலுப்படுத்துவதில்" கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டிய திரு நாயுடு, நமது மகத்தான கலாச்சார மரபுகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறினார். தேசத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்து நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் காட்சி மற்றும் நிகழ்த்து கலைகளைப் பாதுகாக்க அவர் அழைப்பு விடுத்தார்.


மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமியின் தலைவர், திருமதி உமா நந்தூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.iகுழந்தைகள் விரும்பும் கலைகளைக் கற்க பள்ளிகளும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் தேர்வு செய்யும் எந்தவித கலையையும் கற்பதற்கு அவர்களைப் பெற்றோரும், பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

62-வது தேசிய கண்காட்சி கலை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்.

மேல்நாட்டு கலாச்சாரம் காரணமாக நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகள் மறைந்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய கலைகளுக்கு அரசுகளும், சமுதாயமும் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, வெளியில் தெரியாத ஏராளமானோர் விடுதலைக்காக பாடுபட்ட போதிலும், அவர்களைப் பற்றி வரலாற்று நூல்கள் அதிக கவனம் செலுத்தாததால், மக்களுக்கு அவர்களைப் பற்றி தெரியவில்லை என்று கூறினார். இந்த வேறுபாட்டைக் களைய அவர்களது போராட்டம் பற்றி வெளியில் தெரியுமாறு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ரவீந்திர நாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி, காஸி நஸ்ருல் இஸ்லாம், பங்கிம் சந்திர சாட்டர்ஜி தங்களது தேசபக்தி பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதை அவர் நினைவுகூர்ந்தார். கலைஞர்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்ட அவர், வளமையான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் இணைக்கும் இழையாக அவர்களது கலை இருந்தது எனக்குறிப்பிட்டார். கலை மக்களை ஒற்றுமைப்படுத்தும் சாதனம் என்று கூறிய திரு நாயுடு, நமது வளமையான கலாச்சார பாரம்பரியங்களையும், பல்வேறு வகையிலான கலைகளையும் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடியின் தலைவர் திருமதி உமா நந்தூரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...