பிரசாந்த் கிஷோர் முன்வைத்த நான்கு முக்கிய நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஏற்காததால் கட்சியில் இணைய மறுத்தார்
ஐ- பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த நான்கு முக்கிய நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஏற்காததால் பிரசாந்த் கிஷோர் வகுத்த திட்டங்களுக்கு மறுத்து விட்டது
அதாவது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தகவல் தொடர்புகள் அனைத்தும் தமது குழுவிடம் தான் இருக்க வேண்டும்; குறிப்பாக யாருக்கு போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என்பதெல்லாம் தங்களது குழுவிடம் தான் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஆகியவற்றை ஓரம் கட்டுகிற வகையில் பிரசாந்த் கிஷோர் டீம் வந்துவிடும் என விவாதித்து நிராகரித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
பிரசாந்த் கிஷோர் முன் வைத்த 4 நிபந்தனைகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்த நிலையில் கட்சியே காலியாகிவிடும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த சில நிபந்தனைகளை காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேரும் முடிவை பிரசாந்த் கிஷோர் கைவிட்டார் எனத் தெரிகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கான அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த மாநிலக் கட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்தால் போதும் என்கிற முயற்சியை மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முன்னெடுக்கின்றனர். ஆனால் காங்கிரஸையும் மாநில கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரின் கருத்து. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார் கடந்த பத்து ஆண்டுகளில் எதிர்காலத்தையே தொலைத்து விழிபிதுங்கி நிற்கும் காங்கிரஸ் கட்சி தம்மை உயிர்ப்பித்துக் கொள்வதில் படுமும்முரமாகவே இருக்கிறது. ராஜஸ்தானில் மாநில நிர்வாகிகள் கூட்டம், கட்சி சீரமைப்புக்கு கமிட்டிகள் என சமீபத்திய காலங்களில் காங்கிரஸ் தலைமை முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் தேர்தல் வியூகம் வகுக்கும் வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸில் இணைவார் என்ற
நிலையில் திடீரென தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் 2023 சட்டசபை தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டதுடன். இது காங்கிரஸில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸில் தாம் சேரப் போவதில்லை; காங்கிரஸுக்கு இப்போது தேவை தலைமை மாற்றம் தானே தவிர என் போன்ற ஆட்கள் அல்ல எனக் கூறிவிட்டார் பிரசாந்த் கிஷோர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் இணைய மாட்டார்.
கருத்துகள்