புது டில்லியில் திமுக அலுவலகக் கட்டிடத்தை
திமுக தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குறைந்த பட்சம் ஏழு உறுப்பினர்கள் உள்ள கட்சிகளுக்கு, டில்லியில் அலுவலகக் கட்டிடம் கட்ட இடம் தருவதற்கு , மத்திய அரசு முடிவு செய்ததன் படி, பாஜக, தேசிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள, தீன்த யாள் உபாத்தியாயா மார்க் சாலையில், திமுகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலினின் அவரது மருமகன் சபரீசன் மேற்பார்வையில், மூன்று மாடிகளுடன், நவீன வசதிகளுடன், கூடிய அலுவலகம் கட்டப்பட்டது. புது டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் நேற்றுத் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் ‛ A Dravidian Journey' என்ற புத்தகத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் க.துரைமுருகன் பெற்று கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 7 எம்பிக்கள் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்ததன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலம் வழங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் திமுகவுக்கு, புது டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்
பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்ட. பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளன.
பிரமாண்டமாக அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் முகஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அகிலேஷ் யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் ஏ.எஸ். பன்னீர் செல்வம் எழுதிய ‛Karunanithi A Life ' என்ற புத்தகத்தை இந்து என் ராம் வெளியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பெற்று கொண்டார்.
அடுத்து ஜெயரஞ்சன் எழுதிய ‛A Dravidian Journey' என்ற புத்தகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான க.துரைமுருகன் பெற்று கொண்டார்.
திமுகவின் தலைவர் தமிழகத்தின் முதல்வர் தனது கருத்தாக 'சுயமரியாதை - சமத்துவம் - மாநில உரிமைகளுக்கான தெற்கின் குரல், டெல்லியில் உரத்து ஒலிக்க, திராவிடக் கோட்டையாக அமைந்துள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தேன்.
திராவிட இனத்தின் உரிமை முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்! தெற்கு வாழும்!
கழகத்தின் மீது கொண்டுள்ள அன்பால், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த - வாழ்த்திய பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், அவர்களது பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மிடையேயான உறவுப் பாலம் நாட்டைக் காக்க வலுவாக வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்