உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சுதான்ஷு துலியா , குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜம்ஷெட் புர்ஜோர் பார்டிவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.கவுகாத்தி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 223 வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு நொங்மெய்காபம் கோடீஸ்வர் சிங்-கை, தலைமை நீதிபதியின் அலுவலகப் பணிகளைச் செய்ய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான திரு சுதன்ஷு துலியா, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
கருத்துகள்