முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடப்பாடி கே பழனிச்சாமி வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் மாதம் 2-ஆம் தேதி விசாரணை தள்ளிவைப்பு

2018-ஆம் ஆண்டு, முன்னால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு ஊழல் குற்றச்சாட்டையும் எழுப்பியது


தி.மு.க. 'தன் உறவினர்களுக்குச் சாதகமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை முறைகேடாக எடப்பாடி கே.பழனிச்சாமி வழங்கினார்' என்பது  குற்றச்சாட்டு.  சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்து, மூன்று மாதத்திற்குள் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் எடப்பாடி கே.பழனிச்சாமி, சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவும் பெற்றார். அதோடு அவர் மீதான முறைகேடு புகாருமான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராமல் நிலுவையிலிருந்து , தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது 


ஜூலை மாதம் 26-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு வந்தபோது, 'வக்காலத்து மாற்ற வேண்டியதிருப்பதால், மூன்று வார கால அவகாசம் தேவை' என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிட்ட நிலையில். 'அவ்வளவு கால அவகாசம் தர முடியாது' என மறுத்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் மாதம் 2-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எடப்பாடி  கே.பழனிச்சாமி மீது நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகார்களை தி.மு.க எழுப்புவதற்கு முன்னதாக, அப்போது டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், மற்றும் மறைந்த வெற்றிவேல் ஆகியோர் எழுப்பினர். "நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நஷ்டம்" என்று பகீர் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தார்கள். அதன்பிறகே, தி.மு.க தரப்பிலிருந்து இந்த முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் திரட்டப்பட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாரளிக்கப்பட்டது. ஐந்து சாலைப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தது தி.மு.க தரப்பு.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகாரில், "ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் இடையிலான நான்குவழிச் சாலை அமைக்க முதலில் 713.34 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பிறகு, இந்தத் தொகையை 1,515 கோடி ரூபாயாக உயர்த்தினர். இந்த திட்டத்தின்படி, 'ஒப்பந்ததாரருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 75 கோடி ரூபாய் வீதம் கட்டணமாகக் எட்டாண்டுகளுக்கு கொடுக்க வேண்டும்' என்று நிர்ணயிக்கப்பட்டது. சந்தை நிலவரப்படி ஒரு கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க, ஒப்பந்ததாரருக்கான லாபம் எல்லாவற்றையும் சேர்த்தே 2.2 கோடி ரூபாய்தான் செலவாகும். மொத்த செலவு, வருங்காலத்தில் ஏற்படும் விலை ஏற்றம் என எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிட்டால்கூட, இந்த சாலைத் திட்டத்திற்கு 200 கோடிக்கு ரூபாய்க்கு மேல் தேவைப்படாது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை திட்டத்திற்கான டெண்டர் 'ராமலிங்கம் அண்ட் கோ' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக, சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மருமகளான திவ்யாவின் நெருங்கிய உறவினர்தான் இந்த சந்திரகாந்த். முதல்வராகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுனின் மைத்துனருக்கு 1,515 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.

மேலும் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழித்தடம் திட்டத்துக்கு 407.6 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பின்பு, இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு 720 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு எட்டு ஆண்டு காலத்துக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 45 கோடி ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு கி.மீ-க்கு 2.2 கோடி ரூபாய் என்று கணக்கிட்டால் மொத்த செலவு 130 கோடியைத் தாண்டாது. 'வேங்கடாசலபதி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் எடப்பாடியின் சம்பந்தி பி.சுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமானது.

அடுத்து, மதுரை ரிங் ரோடில் நான்கு வழித்தடம் அமைப்பதற்கானது. இதன் மொத்த செலவு 200 கோடி ரூபாய். இந்த சாலைத் திட்டத்திற்கான ஒப்பந்தம், சென்னை முகப்பேரில் உள்ள 'ஸ்ரீ பாலாஜி டோல் வேஸ்' என்கிற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சுப்பிரமணியம், நாகராஜன், ஜே.சேகர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்தான். இந்த நிறுவனத்துக்கு திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டவுடன், இந்தத் திட்டத்துக்கு 18.57 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல் வண்டலூர்- வாலாஜாபாத் ஆறுவழித்தடம் தொடங்கப்பட்டது. இதுவும் நாகராஜன் என்பவரின் 'எஸ்.கே.பி. அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே' நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது திட்டமாக, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்தமும் எஸ்.கே.பி.நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி ஒரு பொது சேவகர். சந்திரகாந்த், சுப்பிரமணியம், பி.நாகராஜன். ஜே.சேகர் ஆகியோருடன் குற்றச்சதியில் எடப்பாடி கே.பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்து மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கச் செய்துள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆம் ஆண்டின் பிரிவுகள் 13(1), 13 (2) ன்படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-பி ஆகியவற்றின் கீழும், எடப்பாடி கே. பழனிச்சாமி செய்த குற்றங்கள் தண்டனைக் குரியவை. அவர் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவே இந்தத் திட்டங்களின் செலவும், நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டன. ஒப்பந்தப் புள்ளி வெளிப்படைத் தன்மைச் சட்டம் 1998-ஆம் ஆண்டின் விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என  புகாரில் ஆர்.எஸ்.பாரதி. தெரிவித்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...