மருத்துவக் குணம் கொண்டதென விளம்பரம் செய்த நிறுவனத்துக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம்
பொதுமக்களை ஏமாற்றி விளம்பரம் செய்து இந்து உப்பு விற்பனை செய்ததற்காக சென்னையைச் சேர்ந்த ஏடிஜே கிளாசிக் சாய்ஸ் எனும் நிறுவனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு.
திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் ஆலடி மாரியம்மன் கோவில் தெரு செல்வகுமார் திருவாரூர் நகர் சஹரா சூப்பர் மார்க்கெட்டில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏடிஜே கிளாசிக் சாய்ஸ் எனும் நிறுவனத்தில் இந்து உப்பை 500 கிராம் வாங்கி ஆறு மாதமாக உபயோகித்துள்ளார்.
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும், அதிக சர்க்கரை அளவை குறைக்கும், இதயத்தை உறுதியாக்கும்,
தைராய்டு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் என்றும் சாதாரண உப்பை விட இந்து உப்பு மருத்துவக் குணம் நிறைந்ததெனவும்
அந்த நிறுவனம் துண்டு பிரசுரத்தில் விளம்பரம் செய்திருந்ததை நம்பி இந்து உப்பை வாங்கி பயன்படுத்தியதில் தனக்கு எவ்வித முன்னேற்றமுமில்லை எனக் கூறி
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்
அதனடிப்படையில் நடந்த வழக்கில் விசாரணை முடிவில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது
கருத்துகள்