முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவியின் மர்மமான மரண வழக்கு பள்ளி நிர்வாகிகள் மூவர் கைது இனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்  கனியாமூர்  சக்தி இண்டர்நேஷனல் மேனிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மர்மமான மரணம்,





ஜூலை 13 ஆம் தேதி நடந்தது.  தனியார் பள்ளியின் விடுதியில் பணம் கட்டி தங்கி படித்து வந்துள்ளார்.  சம்பவ நாளன்று   அதிகாலை ஐந்து மணியளவில் விடுதி வளாகத்தில் ரத்தக் காயங்களுடன் ஸ்ரீமதி கிடந்ததைப் பார்த்தவர்கள் சிகிச்சைக்காக தூக்கிக் கொண்டு போயுள்ளதாக பள்ளி தரப்பில் பொய்யான தகவல் ஆனால் மாணவி தரப்பினர் கூறும் தகவல் வேறு விதமாக உள்ளது பலனில்லை. முன்னரே இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 





மூன்றுநாளாக சாம்பலுக்குள் புதைந்திருக்கும் நீறு பூத்த நெருப்பு போல விஷயத்தை அப்படியே வைத்திருந்தவர்கள் தான் இன்றைய கலவரத்தின் சூத்திரதாரிகளாக பார்க்கும் நபர்கள்'   வேறுவெளி நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர், ஆட்களை சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு எப்போது வேண்டுமானாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்' - என்பதெல்லாம் எதையோ விட்டுவிட்டு எதையோ பிடிக்க முயல்வது போன்ற கதை தான் நடக்கிறது.




கலவரங்கள்,  மற்றும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள், தீ வைப்புகள், பொது சொத்துகளை சூறையாடுதல், பொதுமக்களோடு காவல்துறையினரும் அடிபடுதல் போன்றவை இன்று தான் நாட்டிலேயே முதல்முறை நடக்கிறதா என்ன ? என்ற வினா உண்டு எல்லாக் கலவரங்களுக்கும் பின்னணியிலிருப்பது வெறும் ஒருவரிக் கதை தான்  விதை?  விதை எதுவென்பது தான் ஜூலை மாதம் 15 ஆம் தேதியே ஊரும் உலகமும் மொத்தத்துக்கும் தெரிந்துள்ளதே!  விதை குறித்து தெரியவே தெரியாது என்போர் வாசிக்கவும்: பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி, அதிகாலை வேளையில் காயங்களுடன் செத்துக்கிடக்கிறார்.






மருத்துமனைக்கு மாணவியை கொண்டு போகிறார்கள். முன்னரே இறந்ததை மருத்துவம் உறுதி செய்கிறது. இதுவரை நடந்தது யாவும் இயல்பான சராசரி நிகழ்வு. மாணவியின் குடும்பத்துக்கும் காவல்துறைக்கும் எப்போது தகவல் கொடுக்க ப்பட்டது? மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தரப்பின் பதிலைக் கேட்டு சமாதான நிலைக்கு வந்தார்களா?  பள்ளி நிர்வாகத்திடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் பின் விளைவை யாராவது முன்னரே உணர்ந்தார்களா 

அது குறித்து அரசுக்கு 'நோட்' போடப்பட்டதா ? நியாயம் கிடைக்கும் வரை உடலை  வாங்க மாட்டோமென்று மாணவியின் பெற்றோர் உறுதி காட்டிய தகவலை, மாநில காவல் உளவுத்துறை; அரசின் உள்துறைக்கோ அல்லது தலைமைச் செயலாளர் கவனத்திற்கோ கொண்டு சென்றதா?  'விவகாரம் நேரம் அதிகரிக்க பெரிதாகிக் கொண்டே போகும் போலிருக்கிறது, கூடுதல் காவல்துறை ஃபவரை கள்ளக்குறிச்சி பக்கமாகத் திருப்புங்கள்' என்று மாண்டல காவல்துறை துணை தலைவர். பாண்டியனுக்கோ, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமாருக்கோ எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டதா? இருவரும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் நிலைமையை வலுவில் உருவாக்கிக் கொடுத்தது யார்? பொதுமக்கள் பலரும் காயமடைந்துள்ளனர். பள்ளியின் பேருந்துகளோடு காவல்துறை பேருந்துகளும் எரிக்கப்பட்டு இருப்பதற்கு முதல் கோணல் தான் முற்றிலும் கோணலாகக் காரணம்?   மாவட்ட அளவில் (சிறப்புப் பிரிவு) ஆய்வாளர் ஒருவர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருப்பார், அது போக மண்டல காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் இரண்டு (சிறப்புப் பிரிவு) ஆய்வாளர்கள் இருப்பார்கள்  தவிர, ஒவ்வொரு காவல்நிலையத்தில் ஒரு ஒற்றுப்பிரிவு (I.S) காவலர் இருப்பார், இதில் ஒருவர் கூட எதிர்வரக் கூடிய விளைவுகளை முன்னரே கணித்து மாநில முதலமைச்சர் சிறப்புப் பிரிவுக்கோ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மண்டல காவல்துறை துணை தலைவர் அலுவலகத்திற்கோதகவல் தரவில்லை என்றால் அதற்குப் பெயர் தான் தகவல்'மறைத்தல்'  தானே? 


இப்படிப்பட்ட உயர்தரமான அதிகாரிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மாநகராட்சியைக் கூட சிறப்பாக வழி நடத்த முடியாது என்பது தமிழகத்தின் முதலமைச்சர் அறிந்ததே  ஆகவே மாவட்டத்தில் இனி முதல்வர் நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் பணிமாறுதல் போன்றவை பாயலாம் கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல்..



நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது.. என்ற 

- தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு. மக்களை இவர்கள் எவ்வளவு கேவலமாகப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..என் 

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை.  விடுத்துள்ளார்.

தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது மேலும் பள்ளி தாளாளர் செயலர் மற்றும் முதல்வர் கைது  

இனி தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை..

மாணவி மரணத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஒன்றன்பின் ஒன்றாக  மேற்கொண்ட நடவடிக்கைகள்.. என்ன 

மாணவியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்த பிறகு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பிலான நடவடிக்கைகள்.என்ன

மக்களின் போராட்டம் வன்முறையாக மாறலாம்.. அப்போது சில தரப்பினர் அதில் ஊடுருவும் அபாயம் . போன்றவற்றை முன்கூட்டியே கவனித்து எச்சரிக்கத் தவறிய காவல்துறையின் உளவுப் பிரிவு. என்ன செய்தது .

வன்முறை இல்லாமல் போராடிய மக்களைத் தவிர்த்து,திட்டமிட்டு கலவரத்தை நிகழ்த்தியவர்கள், யார் மேலும் புதிதாக உட்புகுந்தவர்கள் யார்.

சமயம் பார்த்து போராட்டக்காரர் என்ற பெயரில் பொருட்களைக் கொள்ளை அடித்தவர்கள் யார் 

போன்றோரையெல்லாம், எந்தத் தரப்பும் மறைக்க முற்பட்டாலும் அல்லது மறுத்தாலும் ஆண்ட்ராய்டு செல்போன் வீடியோக்கள் சுலபமாகவே காட்டிக் கொடுத்து விடும். அதனால் அவர்கள் தப்புவதற்கு வாய்ப்பில்லை.

இனியாவது சரியான கோணத்தில் நகர்கிறதா என்று பார்ப்போம்.. மாணவியின் மர்மமான மரணம் கொலையா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில் என்று இனிமேல் தான் காணவேண்டும் 

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் காவல்துறையினர் மீது மக்கள் மரியாதை இழந்து விட்ட சூழ்நிலையில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றதும், மேலும் அவர் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வர அவர் மீதிருந்த மரியாதைக்கும் பங்கம் வந்த நிலையில் உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார் என்ற குற்றச்சாட்டும் மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே மக்கள் இது வரை பார்த்த நிலையில் அதில் சிறிது சிறிதாக ஒரு மாற்றம் தற்போது தெரிகிறது. 

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழகத்தின் பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த