54000 பேர் எழுதிய கர்நாடக மாநில உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் முறைகேடு காரணமாக ரூ.100 கோடி வரை ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு அடிப்படையில்;
பணியிலிருந்த ஏ.டி.ஜி.பி ஏற்கனவே கைதான நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 17 வது குற்றவாளி தற்போது பிடிபட்டார் சி.ஐ.டி. காவல்துறை அவரைத் தேடிவந்ததற்கிடையே ரஜனாவை மராட்டிய எல்லையிலுள்ள கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கிரோலி சோதனை சாவடிப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தேர்வு முறைகேட்டில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ரஜனா, ரூபாய் .30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு, மாநில அளவில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்ததுள்ளது தெரிகிறது. கைதான ரஜனாவை சி.ஐ.டி. காவல்துறை பெங்களூருவுக்கு அழைத்து வருகிறார்கள். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலெடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் யாரிடம் ரூபாய்.30 லட்சத்தை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டார், அவருக்கு யார்-யார் உதவினார்கள் என்ற தகவல்கள் விசாரணையின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் தேர்வில் முதலிடம் பிடித்த ரஜனா என்ற பெண் முறைகேடு மூலம் தேர்வான தேர்வர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு விவகாரம் வெளியானபோது இவர் காவல்துறையில் சிக்காமல் இருப்பதற்காக சக தேர்வர்களுடன் மறுதேர்வு வைக்குமாறு கோரி போராட்டத்திலும் ஈடுபட்டார். திருடன் மக்கள் கூட்டத்தில் சேர்ந்து குழப்பம் செய்த நிலை போல இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தவுடன் தலைமறைவானவர் தற்போது கைதாகியுள்ளார். இவர் ரூபாய்.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் முறைகேட்டில் ஈடுபட யார்-யார் உதவி செய்தார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். என சிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்