வருமானத்துக்கு அதிகாமாக 315 சதவீதம் சொத்துக் குவித்ததாக உள்ள வழக்கில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பத் துறையினர் சோதனை
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தொகுதி அதிமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . கே.பி.பி. பாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் நடக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து குவித்ததாக வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கே.பி.பி. பாஸ்கர் அவர் பெயரிலும் அவரது மனைவி, மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக புகார்.அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையிலிருந்து வருகிறது.
மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
கே.பி.பி. பாஸ்கர், அவரது மனைவி உமா மீது வழக்குப்பதிவு
கருத்துகள்