முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

 பிரதமர் அலுவலகம் ஷாஹிப்சாதா அஜித் சிங் நகரில் (மொகாலி) கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்



“இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு சுகாதார சேவைகளை வளர்ச்சியடையச் செய்வது முக்கியமாகும்”

“கடந்த எட்டு வருடங்களாக நாட்டின் முன்னுரிமை பணிகளில் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் இடம்பெற்றுள்ளது”



“கடந்த எட்டு வருடங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன”

“முற்போக்கு சமூகத்தில் மனநலன் பற்றிய சிந்தனையில் மாற்றத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதும் கூட நமது பொறுப்பு”

“இந்தியாவின் 5-ஜி சேவை ஊரகப் பகுதிகளில் சுகாதார சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்


பிரதமர் திரு நரேந்திர மோடி, மொகாலியில் உள்ள ஷாஹிப்சாதா அஜித் சிங் நகரில் கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை இன்று (24.08.2022) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டில் சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதை இன்றைய நிகழ்வுகள் பிரதிபலிப்பதாகக் கூறினார்.  இம்மருத்துவமனை பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு சேவை அளிக்கும் என்று தெரிவித்தார். இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பஞ்சாப் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

       இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது குறித்து செங்கோட்டையில் ஆற்றிய தமது உரையை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு சுகாதார சேவையை வளர்ச்சியடையச் செய்வது முக்கியம் என்று தெரிவித்தார். சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன் நவீன மருத்துவமனைகள் மக்களுக்கு கிடைக்கும் போது அவர்கள் விரைவில் குணமடைந்து சரியான திசையை நோக்கி செல்வார்கள் என்று கூறினார். புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். டாடா நினைவு மையம் இப்போது ஆண்டுதோறும் 1.5 லட்சம் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மருத்துவமனை மற்றும் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிலையத்தின் சுமை குறையும் என்றும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

     நல்ல சுகாதார கட்டமைப்பு என்பது, நான்கு சுவர்களை கட்டுவது மட்டுமல்ல என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு வழியிலும் தீர்வு காண்பது மற்றும் படிப்படியாக ஆதரவு அளிப்பதன் மூலமே எந்தவொரு நாட்டிலும் சுகாதார கட்டமைப்பு வலிமையாகும் என்று கூறினார். கடந்த எட்டு வருடங்களாக நாட்டின் முன்னுரிமை பணிகளில் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

     ஆறு வழிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் நாட்டின் சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். முதலாவதாக நோய்த்தடுப்பு சுகாதார மையத்தை ஏற்படுத்துதல், இரண்டாவதாக கிராமங்களில் சிறிய மற்றும் நவீன மருத்துவமனைகளை திறத்தல், மூன்றாவதாக நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பெரிய மருத்துவ ஆராய்ச்சி கழகங்களை திறத்தல், நான்காவதாக நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஐந்தாவதாக நோயாளிகளுக்கு விலை குறைந்த மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆறாவதாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் சிரமங்களை குறைத்தல் ஆகிய ஆறு வழிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறினார்.   

     நோய்த்தடுப்பு முறை குறித்து பேசிய பிரதமர், நீர்வள இயக்கத்தின் மூலம் நீரினால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.  அதேபோல், தூய்மை, யோகா, உடல் திறன், ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு உள்ளிட்டவையும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணங்கள் என்று கூறினார்.  இரண்டாவதாக, தரமான சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் 1.25 லட்சம் மையங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  பஞ்சாபில் மட்டும் 3000 மையங்கள் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  நாடு முழுவதும் 22 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பஞ்சாபில் மட்டும் 60 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

     நோய்த்தொற்று இருப்பது குறித்து ஒருமுறை கண்டறியப்பட்டால், சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.  நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  சுகாதார கட்டமைப்பு இயக்கத்தின்கீழ், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 64 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாவட்ட அளவில் நவீன சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டில் ஒரு காலத்தில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் பல்வேறு மருத்துவமனைகள் ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவமனை கட்டுவது முக்கியம் என்றாலும், அதற்கு இணையாக போதுமான மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்களை பணியமர்த்துவதும் முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார். இப்பணிகள் நாட்டில் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார்.  2014 ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் 400-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகள் இருந்தன என்றும், அதாவது, 70 வருடங்களில் 400-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.  அதேநேரத்தில் கடந்த எட்டு வருடங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அலோபதி மருத்துவர்களைப் போல ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் மருத்துவர்-நோயாளி விகிதாச்சாரம் மேம்படும் என்று கூறினார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் ஏழை மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதுவரை 3.5 கோடி நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும் அவர் கூறினார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் நோயாளிகளுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சைக்கான 500-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 90% வரை குறைந்துள்ளதாகவும், இதனால், ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

     முதன் முறையாக சுகாதாரத்துறையில் நவீன தொழில்நுட்பம் பெரிய அளவில் புகுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.  தமது உரையின் இறுதியில், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம், ஒவ்வொரு நோயாளிக்கும் குறித்த நேரத்தில் தரமான சுகாதார வசதிகளை உறுதி செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள 5-ஜி சேவை ஊரகப் பகுதிகளில் சுகாதார சேவையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.  இது கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள் பெரிய மருத்துவ மனைகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். முற்போக்கு சமூகத்தில் மனநலன் பற்றிய சிந்தனையில் மாற்றத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதும் கூட நமது பொறுப்பு என்று அவர் தெரிவித்தார். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு காண முடியும் என்று பிரதமர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்