முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராஜஸ்தான் முதல்வர் அசோக் ஹேலட் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு காரணமாக விலகினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் உட்கட்சியின் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்ற முடிவை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எடுத்த முடிவு


வயோதிகம், உடல்நிலை பாதிப்பு காரணமாகவும், ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாகவும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்ற முடிவை  எடுத்துவிட்டார்.       ராகுல் காந்தியும் தேர்தல் தோல்விகள் மற்றும் ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராகப் போவது யார் என்ற வினா எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடையே இது தொடர்பான குழப்பமும் இருந்ததற்கிடையில் தான் சோனியா காந்தி நேற்று முன்தினம் இராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் ஹெலாட்டைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் படி கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

71 வயதான மூத்த தலைவரான அசோக்ஹெலாட், சோனியா காந்தி ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வாரென்று எதிர்பார்க்கப்படும் நிலையில். .அசோக் ஹெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கால காங்கிரஸ் தலைவர், முதல்வர் அசோக் ஹெலாட். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான, மூத்த தலைவராவார். மத்திய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் ஹெலாட்  தான்.  குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க அசோக் ஹெலட் தான் பிரதானியாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்து சென்ற 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. பன்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின.

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் . நாளை ஞாயிற்றுக்கிழமை இதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் எப்போது நடக்குமென அறிவிப்பு வெளியிடப்படும்.

சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்தது. அதற்கு அவரது குழந்தைத் தனமான ஒரு சில நடவடிக்கைகளால்  ஆனால் அதன்பின் ராகுல்காந்தி அரசியல் ரீதியாக நிறைய முதிர்ச்சியடைந்தார். அவரது பேச்சுக்கள், பேட்டிகள் அதிகம் கவனிக்கப்பட்டன. அதற்கு பின்னாலிருந்தது அசோக்ஹெலாட் 


தான். அவர் தான் ராகுல்காந்தி என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியவர். குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் சிறப்பாக செயல்படவும் அசோக் கெலாட்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.சோனியாவிற்கு நெருக்கம், ராகுலுடன் நட்பு.. நேரு குடும்பத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் என்ற பல காரணங்களால் அசோக் கெலாட்டை தலைவராகும்படி சோனியா காந்தி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இவர் மூத்த தலைவர், மற்ற தலைவர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள், பலரும் அனுசரித்துச் செல்வார்கள், வடஇந்திய மாநிலங்களில் பிரபலம், தேர்தல் அரசியல் தெரிந்தவர், தொண்டர்களை வழிநடத்த தெரிந்தவர், கள அரசியல் தெரிந்தவர் என்பதால் இவரை சோனியா அணுகியதாக தெரிகிறது. அதன் முடிவு நாளை தெரியும்.தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் பிராந்தியக் கட்சிகளிடமும் காங்கிரஸ் பின்னடைவில் இருக்கிறது.இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிய குலாம் நபி ஆசாத் இச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.      ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சித் தலைமை மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்தார். தலைமை மாற்றம் தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் இதையடுத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அல்லது தனிக் கட்சி துவங்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு 5 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் சுமார் 50 ஆண்டுகால உறவை கொண்டிருந்தேன். தற்போது கனத்த இதயத்துடனும், வருத்தத்துடன் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. நாட்டின் எந்தவொரு மூலையிலும் அமைப்பு ரீதியாக கட்சியின் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, அதை 24 அக்பர் சாலையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை நடத்தும் குழுவினரிடம் அளித்து கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தற்போது அசோக் ஹேலட் தலைவராகப் போகும் சூழ்நிலையில் தனிக் கட்சியைத் துவங்குவது குறித்து அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் அகில இந்திய அளவில் கூர் நோக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...