காங்கிரஸ் உட்கட்சியின் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்ற முடிவை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எடுத்த முடிவு
வயோதிகம், உடல்நிலை பாதிப்பு காரணமாகவும், ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாகவும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார். ராகுல் காந்தியும் தேர்தல் தோல்விகள் மற்றும் ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராகப் போவது யார் என்ற வினா எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடையே இது தொடர்பான குழப்பமும் இருந்ததற்கிடையில் தான் சோனியா காந்தி நேற்று முன்தினம் இராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் ஹெலாட்டைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் படி கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.
71 வயதான மூத்த தலைவரான அசோக்ஹெலாட், சோனியா காந்தி ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வாரென்று எதிர்பார்க்கப்படும் நிலையில். .அசோக் ஹெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கால காங்கிரஸ் தலைவர், முதல்வர் அசோக் ஹெலாட். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான, மூத்த தலைவராவார். மத்திய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் ஹெலாட் தான். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க அசோக் ஹெலட் தான் பிரதானியாக இருந்தார்.காங்கிரஸ் கட்சியில் கடந்து சென்ற 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. பன்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின.
காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் . நாளை ஞாயிற்றுக்கிழமை இதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் எப்போது நடக்குமென அறிவிப்பு வெளியிடப்படும்.
சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்தது. அதற்கு அவரது குழந்தைத் தனமான ஒரு சில நடவடிக்கைகளால் ஆனால் அதன்பின் ராகுல்காந்தி அரசியல் ரீதியாக நிறைய முதிர்ச்சியடைந்தார். அவரது பேச்சுக்கள், பேட்டிகள் அதிகம் கவனிக்கப்பட்டன. அதற்கு பின்னாலிருந்தது அசோக்ஹெலாட்
தான். அவர் தான் ராகுல்காந்தி என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியவர். குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் சிறப்பாக செயல்படவும் அசோக் கெலாட்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.சோனியாவிற்கு நெருக்கம், ராகுலுடன் நட்பு.. நேரு குடும்பத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் என்ற பல காரணங்களால் அசோக் கெலாட்டை தலைவராகும்படி சோனியா காந்தி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இவர் மூத்த தலைவர், மற்ற தலைவர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள், பலரும் அனுசரித்துச் செல்வார்கள், வடஇந்திய மாநிலங்களில் பிரபலம், தேர்தல் அரசியல் தெரிந்தவர், தொண்டர்களை வழிநடத்த தெரிந்தவர், கள அரசியல் தெரிந்தவர் என்பதால் இவரை சோனியா அணுகியதாக தெரிகிறது. அதன் முடிவு நாளை தெரியும்.தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் பிராந்தியக் கட்சிகளிடமும் காங்கிரஸ் பின்னடைவில் இருக்கிறது.இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிய குலாம் நபி ஆசாத் இச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சித் தலைமை மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்தார். தலைமை மாற்றம் தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் இதையடுத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அல்லது தனிக் கட்சி துவங்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு 5 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் சுமார் 50 ஆண்டுகால உறவை கொண்டிருந்தேன். தற்போது கனத்த இதயத்துடனும், வருத்தத்துடன் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. நாட்டின் எந்தவொரு மூலையிலும் அமைப்பு ரீதியாக கட்சியின் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல் நடத்தப்படவில்லை.
தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, அதை 24 அக்பர் சாலையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை நடத்தும் குழுவினரிடம் அளித்து கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தற்போது அசோக் ஹேலட் தலைவராகப் போகும் சூழ்நிலையில் தனிக் கட்சியைத் துவங்குவது குறித்து அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் அகில இந்திய அளவில் கூர் நோக்கப்படுகிறது.
கருத்துகள்