வீட்டுவேலைக்காக குவைத் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காரைக்குடி பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை சொந்த ஊருக்குத் திரும்பியனுப்ப குவைத் நாட்டின் இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது குடும்பத்தினரும் குவைத் வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பும் வேண்டுகோள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.எம்.சி' காலனியை சேர்ந்த சாந்தி (வயது 32). ஜூலை மாதம் 13 ஆம் தேதி வீட்டு வேலைக்காக காரைக்குடி நெசவாளர்காலனியில் வசிக்கும் இடைத்தரகர் பிறைமதி என்பவர் ஏற்பாட்டில் அனுப்பி குவைத் நாட்டிற்குச் சென்றார். ராபியா என்னுமிடத்தில் ஒரு அரபியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு தினமும் ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வைத்துள்ளதாக வும். வேலைகளை முடித்தாலும், ஏற்கனவே சலவை செய்த துணிகளை மீண்டும் கலைத்துப் போட்டு திரும்பவும் சலவை செய்யும் படி கூறியுள்ளதாகவும். வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கிளம்பும்போது வேண்டுமென்றே சில பேப்பர்களைக் கிழித்து போட்டு மீண்டும் வீடு முழுவதும் பெருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளதாகவும்.வேலை முடிந்த பிறகு, அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் பேசுவதற்கு தொலைபேசியை தருவதில்லை எனவும். அதனால் மனம் உடைந்த சாந்தி கத்தியால் கைகளில் அறுத்துக் கொண்டதாகவும் இருப்பினும் அவரை வெளியே அனுப்பவில்லை எனவும்,நேற்று முன்தினம் சாந்தி, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் தைராய்டு மாத்திரைகளை உட் கொண்டதால் மயங்கி விழுந்ததாகவும். தற்போது அவர் குவைத் நாட்டின் பர்வானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும்
குவைத் நாட்டில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பின் நிர்வாகியான திருநெல்வேலி மரைக்காயர் தகவல் அறிந்து சென்று அவரைச் சந்தித்து. சிகிச்சையிலுள்ள சாந்தி அவரிடம் கூறுகையில், குடும்ப வறுமை காரணமாகத்தான் நான் குவைத்தில் வீட்டு வேலைக்கு வந்தேன் ஆனால் இங்கு தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்குவதோடு உணவு, டீ கூட தராமல் கொடுமைப்படுத்திய தாகவும் யாரிடமும் பேசவிடாமல் அலைபேசியை பறித்துக்கொண்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும். அவரை சொந்த ஊர் செல்ல குவைத்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவ வேண்டுமென்று தெரிவித்தார்.
சாந்தியை வேலைக்கு அனுப்பிய ஏஜன்ட்கள் அவர், 1.5 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கேட்பதாகவும். எனவே உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள தமது மகளை காரைக்குடிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு காரைக்குடி நாச்சியார்புரம் காவல்நிலையத்தில், சாந்தியின் தாயார் சுப்புலட்சுமி புகார் செய்துள்ளார்.
குவைத் வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பின் நிர்வாகி மரைக்காயர் கூறுகையில், குவைத்தில் தற்போது தற்கொலைக்கு முயன்று சிகிச்சையிலுள்ள சாந்தியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
கருத்துகள்