முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா 


குன்றக்குடி திருவண்ணாமலை  ஆதீனத்தின் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான ஆலயம் 'கோவிலைத் தழுவிய குடிகள்: குடிகளைத் தழுவிய கோவில்’, ‘கடவுளைப் போற்று மனிதனை நினை’ என்பவை தான் அருள்நெறி ஆன்மிகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனிதத்தை மேம்படுத்தும் பணியில் குன்றக்குடி ஆதீனங்களில் பலரும் ம் ஈடுபட்டார்கள். மனிதத்தை மறந்து கடவுளைப் போற்றுதல் ஆன்மிகம் ஆகாது! கடவுளை மறந்து மனிதத்தைச் சிந்திப்பது வாழ்வியல் ஆகாது: கடவுளைப் போற்ற வேண்டும்; மனிதனை நினைக்க வேண்டும்.  தவத்திரு அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் அவர்கள் ஆண்மீக ஆளுமை 300 ஆண்டு காலம் நடத்திய ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். 


 ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி. (1671–1710)  இராமநாதபுரம் சேதுபதி நாட்டின் அரசர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுரம் சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றியவர் இவருக்கு 45 மனைவிகள் குழந்தைகள் இல்லை   கள்ளர் குலத்துப் பெண் கதலி  என்பவரைக் காதலித்து பின்னர் அவரையே 46 வதாகத் திருமணம் புரிந்தார்,

அவருக்கு பிறந்த மகள் தான் சிவகங்கையின் முதலாவது பட்டத்து இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியார் பின்னர் தன் மனைவியின் சகோதரரான இரகுநாதனை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாதத்  தொண்டைமானாக்கி  அவரை திருமயம் பிரதானியான முன்னாள் சிவந்தெழுந்த பல்லவராயர்க்குப் பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வழி வம்சத்தை உருவாக்க முயன்றார். 



திருமெய்யம் பாளையக்காரரான சிவந்தெழுந்த பல்லவராயர்  சேதுபதி நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் கோட்டம் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பிலிருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி சிவந்தெழுந்த பல்லவராயர் தஞ்சாவூர் மராட்டியருடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்ததையறிந்த இரகுநாத சேதுபதி மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது இராமவிலாசம் அரண்மனையில் அமைந்துள்ள அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்றொழித்துவிட்டு அவரது பணிக்கு தனது மைத்துனர் இரகுநாதத் தொண்டைமானை கள்ளர் சீமைத் தலைவராகவும்  நியமனம் செய்தார்.





இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேதுபதி மன்னர் ஏற்கனவே  திருவண்ணாமலை ஆதீனத்தின் சன்யாசி திருச்சுழி ஆலயத்தில் வழங்கிய அருளாசியால் சேதுபதி தமது மனைவியாகக் கொண்டிருந்தார். அதற்கு தானமாக வழங்கப்பட்டது தான் இன்று உள்ள ஐந்து கோவில் தேவஸ்தானமும் அதில் ஒன்றான தேனாட்சி அம்மன் ஆலயமாகும் மற்றும் அதன் உப கோவில்களான சதுர்வேதி மங்கலம் மற்றும் இரண்டு இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக புதுக்கோட்டை இரகுநாதத் தொண்டைமான் கருதப்பட்டார்.


என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை அவர் ஏற்படுத்தினார். அதனால் சேதுபதி மன்னர் மிகுந்த சீற்றமடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. 46 வது மனைவி கதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன. கீழாநிலைக்கோட்டையும், திருமயம் கோட்டையும், பட்டுக்கோட்டையும்       நாலுகோட்டையும், திருப்பத்தூர் கோட்டையும், வாராப்பூர் கோட்டையும் கடல் வழி தொண்டித் துறைமுகமும் அரணாக உள்ள சேதுபதி சீமையின் வடக்குப் பிராந்தியம்




கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் மருமகனுக்கு சிவகங்கையும், மைத்துனருக்கு புதுக்கோட்டையுமென ஐந்து பகுதிகளில் இரண்டு பகுதிகள் பிரித்து வழங்கப்பட்டது போக மூன்று பகுதிகள் சேதுபதி மன்னர் வழியிலிருந்தது. மன்னருக்கு அருளாசி வழங்கி அதன் பலனாக அமைக்கப்பட்டது தான்  குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதினம் அது தோன்றிய வரலாறு பழமையானது.   சேதுபதி மன்னர் வழங்கிய அருட்கொடை ஐந்து கோவில் தேவஸ்தானம் கொண்ட ஏழு ஆலயங்கள். பெருமை வாய்ந்த  17 வது திருவண்ணாமலை மடாதிபதி நாகலிங்க தேசிக குருமூர்த்திகள் திருவண்ணாமலையிலிருந்து  திருத்தல யாத்திரை செய்ய இராமேஸ்வரம் வர திருவுள்ளம் கொண்டு திருச்சுழியில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள மடத்தில் எழுந்தருளினார்.   தீர்த்தமாடிச் சிவனார் உறையும் திருக்கோயில்களை வலம் வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தார்.  ஆங்கு  அறிஞர்களும், சான்றோர்களும்




மெய்யன்பர்களும் குருநாதரை வரவேற்றனர்;  17 வது குருமூர்த்திகள் திருமுதுகுன்றம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பெருந்துறை, திருவாடானை, காளையார்கோயில் முதலிய திருத்தலங்களை வழிபட்டுத் தான் பின்னர் திருச்சுழியலுக்கு எழுந்தருளினார்கள். இச்செய்தியறிந்த இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதி (கி.பி. 1675—1710) மகிழ்ச்சி கொண்டார்.  குருமூர்த்திகளின் பெருமையை முன்பே தெரிந்து வைத்திருந்த  சேதுபதி மன்னர்., உடனே திருச்சுழியலுக்கு வந்து குருமூர்த்திகளைக் கண்டு கொண்டு அருளாசி பெற திருவடிகளில்  வணங்கினார்.  இராமேசுவரத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற குருமூர்த்திகளிடம் தமது விருப்பத்தை உரைத்த மன்னர், உடனே அதற்கு ஆவன செய்தார்.  மன்னர் பரிவாரங்களுடன்  புடைசூழ, குருமகாசந்நிதானம் இராமேசுவரம் சென்று, தீர்த்தமாடி இறை வழிபாடு செய்து திரும்பினார்கள். இவ்வாறு திரும்பிய நிலையில் மன்னர், வேண்டுகோளை ஏற்று சேதுபதி சீமையிலேயே பிரான்மலை எனும் பரப்புமலையில்

அருள்மிகு மங்கை பாகர் திருத்தலத்தில் சுவாமிகள் தங்கி மடம் அமைத்து அருளாட்சி புரிய வேண்டும் என்று வேண்டினார்;  பொன்னும் மணியும் காணிக்கையாகச் செலுத்தினார்.  ஐந்துடன் இரண்டு சேர்ந்த ஆலயங்களைத் தானமாகத் தந்த சேதுபதி மன்னரின் வேண்டுதலைக் 17 வது குருநாதர் கருணையுடன் ஏற்று கி.பி. 1690 ஆம் ஆண்டு  கொடுங்குன்றம் எனும் பரம்புமலை ஆகிய பிரான்மலையில் தொடங்கி நடந்து வந்த மடாலயம் தான் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தானம். 17 வதாக வந்த ஆதீனம் வழியில் தொடர்ந்து அருளாட்சியில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகளுக்குப் பின்னர் 




 18. வயது திருவருள் திரு குமரசாமி தேசிகர்

19. வது திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் 

20. வது திருவருள் திரு சிதம்பரநாத தேசிகர்

21. வது திருவருள் திரு சிவக்கொழுந்து தேசிகர்

22. வது திருவருள் திரு நமச்சிவாய தேசிகர்

23. வது திருவருள் திரு அகத்தீசுவர தேசிகர்

24. வது திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் I

25. வது திருவருள் திரு ஏகாம்பர தேசிகர்

26. வது திருவருள் திரு வைத்தியநாத தேசிகர்

27. வது திருவருள் திரு அண்ணாமலை தேசிகர்  I

28.வது திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிகர்

29. வது திருவருள் திரு ஆறுமுக தேசிகர் 

30. வது திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் II

சுவாமிகள் வரை 







பிரான் மலையிலிருந்து அருளாசி புரிந்த குருமூர்த்திகளில் பலர் மிகக் குறைவான காலமே அருளாசி செய்தவர்கள் காலத்தில் பிரான்மலையில் ஆதீனத் திருமடம் நிறுவப் பெற்றது.  பிரான்மலை, (பிரான்மலை உட்கடைக்கோவில் சதுர்வேதமங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோவில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் சேதுபதி மன்னர் தானம் வழங்கிய காலம் தொட்டு ஆதீன பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாசி செய்து வருகின்றனர். ஆதீனத்தில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் நிறைந்தவர்களாக விளங்கினர்.



28-ஆவது பட்டம் ஞானப் பிரகாச தேசிகர் குன்றக்குடி அருள் தரு சண்முகநாதப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாட்டின் காரணமாகவே 29-ஆம் பட்டம் குருமூர்த்திக்கு ஆறுமுகதேசிகரெனத் தீட்சாநாமம் பெற்ற நிலையில்.  28-ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் அவர்கள் முதல் 30—ஆம் பட்டம் திருச்சிற்றம்பல தேசிகர் அவர்கள் வரை பிரான்மலையில் இருந்து கொண்டு அருளாட்சி புரிந்து வந்த போதிலும் அவர்கள் அனைவருக்கும் குன்றக்குடிப் பெருமான் மீது ஈடுபாடு மிகுந்து வரலாயிற்று.  திருவருள் திரு மருதநாயக தேசிகர் காலம், சிவகங்கைச் சீமையையாண்ட தளவாய் பிரதானிகளான மன்னர் மருது பாண்டியர் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயிலை இப்போதிருக்கும் நிலையில் பெரிய அளவில் திருப்பணி செய்து சாந்துப்புலவரைக் கொண்டு



மயூரகிரிக்கோவையையும், (கி.பி. 1778) செய்வித்துத் தனிப்பெருமை சேர்த்திருந்த காலம்.  எனவே, மருதநாயக தேசிக குருமூர்த்திகளால் பிரான்மலையிலிருந்த காளத்தியப்பர் குன்றக்குடித் திருமடத்துக்கு எழுந்தருள்விக்கப் பெற்றார்.  அக்காலம் முதல் திருவண்ணாமலை ஆதீனமடாலயம் குன்றக்குடியில் திகழ்கிறது.  31—ஆம் பட்டம் திருவருள் திரு மருதநாயக தேசிகருக்குப் பின் கி.பி. 1860 வரை குன்றக்குடியிலிருந்து அருளாட்சி புரிந்து வந்த குருமூர்த்திகள் பலர் அதன் விபரம் வருமாறு:

32.வது திருவருள் திரு தண்டவராய தேசிகர் II

33. வது திருவருள் திரு சிவசுப்பிரமணிய தேசிகர்

34. வது திருவருள் திரு சாம்பசிவ தேசிகர்

35. வது திருவருள் திரு ஆறுமுக தேசிகர் II

36. வது திருவருள் திரு அருணாசல தேசிகர் I

37. வது திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் II

இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த அருளாளர்களாக விளங்கினர்.  சைவமும், தமிழும் தழைத்தினிதோங்கப் பெரும்பணிகள் புரிந்தனர்.

38-ஆம் பட்டம் பெரிய ஆறுமுக தேசிகர் (கி.பி.1860—1889)

39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1890—1893)

40 ஆம் பட்டம் தாண்டவராய தேசிகசுவாமிகள் (கி.பி.1893—1902.)             41 ஆம் பட்டம் நடராச தேசிக சுவாமிகள் (கி.பி.1902—1905)    40 ஆம் பட்டம் தாண்டவராய தேசிகசுவாமிகள் (கி.பி.1893—1902)

42 ஆம் பட்டம் அண்ணாமலை தேசிக சுவாமிகள் (கி.பி.1905—1928)



    43 ஆம் பட்டம் பொன்னம்பல தேசிக சுவாமிகள்(கி.பி.1928—1946)

44 ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1946—1952)   தொடர்ந்து 45 ஆம் பட்டத்தில் தவத்திரு தெய்வசிகாமணி தேசிகர் அடிகளார் அதன் பின்னர் தற்போது 46 வது பட்டம் தவத்திரு பொன்னம்பல தேசிகர் அடிகளார் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா ஆலயத்தின் வரலாற்றுப் பார்வை:- ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்  தேனாற்று அம்மன்.

 சிராவயல் புதூர் கிராமத்திலிருக்கும் திருத்தலம் அருள்மிகு தேனாட்சியம்மன் கோவில். சிராவயல் புதூரைச் சேர்ந்த ஆயர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று பக்கத்து ஊர்களில் விற்றுவிட்டு திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல் படியே ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம்மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவி அழைக்கப்படுகிறது. அந்தக் கோவிலைச் சுற்றி  இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று . உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்ததன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது. ஆலயத்தில் உள்ள காளி அம்மன் பக்தி வாய்ந்த நிலையில் உள்ளது. அணைவரும் வழிபட்டு வந்தால் நல்லது நடக்குமென நம்பிக்கை உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த