ஜெயமே லயம் திரைபடத்தில் வரும் சாமியார் போல யாருக்கு அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறார்களோ அவர்கள் தான் இங்கு துறை ஜாம்பவான் வல்லுநராக, அறிவியலாளராக, ஆய்வாளராக, குருவாக, ஆன்மீக வழிகாட்டியாக, தீடீர் சாமியார் மற்றும் தலைவராக ஏன் கடவுளாகவும் கூடக் கொண்டாடப் படுகிறார்கள்.
விளம்பரமின்றி இருக்கும் அந்தத் துறை வல்லுநர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தாலும் சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பு குறைவதில்லை.
63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் செய்யாத அற்புதங்களையும், தெய்வீகப் பணிகளையும் கண்டுகொள்ளாமல், அவர்களைக் கொண்டாடாமல் தற்போது சாய்பாபாக்களையும், பங்காருகளையும், நித்யானந்தாக்களையும், கொண்டாடித் தீர்த்துவிட்டு
தற்போது சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை எதிர்வீட்டு நபருடன் ஊரைவிட்டு ஓடிப்போன பெண் சாமியார் அண்ணபூரனி திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் ராஜா தோப்பு ஆஸ்ரமம் வரை வந்த கதை பெரிது. அந்த அன்னபூரணியைக் கொண்டாடத் தயாராகும் இந்த மக்களிடையே நற்செயல்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இதனால்தான் ஆன்மீகப் பணிகளில் இருந்து அரசியல் பணிகள் வரை நேர்மையானவர்களும், உண்மையானவர்களும் குறைந்து கொண்டே வருகின்றனர்.
அருகதையற்றவர்களை வெறும் விளம்பரங்களாலேயே புனிதர்கள் ஆக்கும் மக்களின் இந்த செயல்பாடுகள் தொடரும் வரை, நல்ல அறிஞர்களோ, ஆன்மீகவாதிகளோ, துறை வல்லுநர்களோ சமூகத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதை இங்கு நாம் உணரத் தலைப்படல் வேண்டும். அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழ இப்போதிருந்தே இவர்களைப் போல போலியான நபர்கள் குறித்த விழிப்புணர்வு தேவை.. நமது பரம்பரை குல தெய்வ வழிபாடு தேவை.
கருத்துகள்