முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரோடு இருக்கும் முன்னால் கணவருக்கு இறப்பு சான்று வாங்கிய விவாகரத்தான மனைவி

உயிரோடு  இருக்கும் முன்னால் கணவருக்கு இறப்பு சான்று வாங்கிய விவாகரத்தான மனைவி

சிவகங்கை : உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக சான்று பெற்று, அதனடிப்படையில் வாரிசு சான்றும் பெற்று தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்த முன்னாள் மனைவி மற்றும் ஊழலுக்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சந்திரசேகர் (வயது 42), புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனுார் கலாமந்திரம் தெருவைச் சேர்ந்தவர் அ.சந்திரசேகர் கொடுத்துள்ள மனுவில் நான்        காரைக்குடி தாலுகா கண்டனூர்  அருணாச்சலம் - வாசுகி தேவியின் இரண்டாவது மகன் சந்திரசேகர். மளிகை கடையில் பணிபுரிந்து வருகிறேன்.       கலாமந்திரம் தெருவில் எனது பெற்றோருடன் வசிக்கிறேன். எனக்கும் காரைக்குடியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மூத்த மகள் நதியா ஸ்ரீ (வயது 36), என்பவருக்கும் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்., 8 ஆம் தேதியில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் உள்ளனர்.


மனகசப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று விட்டோம். மாத்துார் ரோட்டில் எனக்குச் சொந்தமானது 11.25 சென்ட் காலிமனையை நான் விற்பனை செய்ய முயற்சித்த போது ஏற்கனவே காரைக்குடியை சேர்ந்த கலைக்கோவன் என்பவருக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவநது  அது குறித்து காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த போது நான் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்., 24 ஆம் தேதியில் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழை காரைக்குடி நகராட்சியில் எனது முன்னாள் மனைவி நதியா ஸ்ரீ போலியாகப் பதிவு செய்து ஊழல் அதிகாரிகள் உதவியில் பெற்றுள்ளார்.

அதனடிப்படையில் தன்னை வாரிசாகவும், குழந்தைகளை மைனர் எனவும் காண்பித்து வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை விற்பனை செய்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்ததன் பெயரில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்., 18 ஆம் தேதியில் விற்பனைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. உயிரோடு இருக்கும் என்னை இறந்ததாக தெரிவித்து இறப்பு சான்றிதழ் பெற்று, அதனடிப்படையில் திட்டமிட்டு வாரிசு சான்றிதழ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர், பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் கூறியது:


இந்த முறைகேடு குறித்து ஏற்கனவே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அதில் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சித்தலைரிடம் மனு அளித்துள்ளேன், என்றார். இதுபோன்ற பல ஊழல்களில் ஊறிப்போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த