சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தலைமை ஆசிரியை வீட்டில் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாப்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ரஞ்சிதம் (வயது 52) நேற்று
புதன்கிழமை பள்ளிக்கு வராமல் இருப்பது அறிந்து அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் வீட்டில் போய் பார்த்த நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளது குறித்து திருப்பத்தூர் நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வந்து பார்த்த பின்னர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் கொலை நடந்த வீட்டைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இரஞ்சிதம் கணவர் ராஜேந்திரன் முன்பே காலமாகிவிட்டார். இவரது மகன் அம்பேத்கார் பாரதி என்பவர் கோயம்புத்துார் மருத்துவ கல்லூரியில் படிக்கிறார். மகள் அபிமதி பாரதிக்குத் திருமணமாகி பட்டுக்கோட்டை வங்கியில் பணிபுரிகிறார்.
கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இவரை வெட்டிப் படுகொலை செய்துளதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும். மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்