தமிழ்நாட்டிற்கும் -காசிக்குமுள்ள தொடர்பை வெளிக்கொணர மத்திய அரசின் திட்டம்
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் 'காசி தமிழ் சங்கமம்' என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதில் தமிழ்நாட்டுக்கும், வாரணாசி எனும் காசிக்குமிடையிலுள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக் கொண்டுவருவது தான் நோக்கமாகும்.
இச்சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாதம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ்நாட்டின் 12 பல்வேறிடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி, அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். விருந்தினர்கள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ஊர்களிலிருந்து 12 வெவ்வேறு தேதிகளில் புறப்படும் ரயில்களில் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் காசிக்கு குழுவாகச் செல்ல வேண்டும்.
அவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி,அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். விருந்தினர்கள் அனைவருக்கும் பயணச் செலவு இலவசம். அத்துடன் காசி மற்றும் அயோத்தியில் தங்குமிடம் வசதியும் இலவசமாக வழங்கப்படும்.
அனைத்து விருந்தினர்களும் இலவசப் பயண வசதியும் காசி மற்றும் அயோத்தியில் இலவசமாக தங்குமிட வசதியும் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் https://kashitamil.iitm.ac.in/ வலைதளத்தில் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்