முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உஜ்ஜைனியில் ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி 

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மஹாகல் கோயிலின் பாரம்பரிய உடையில் பிரதமர் வந்தார். அவர் நந்தி துவாரிலிருந்து மஹாகால் லோக்கிற்கு சென்றார். அவர் உள் கருவறையில் பூஜை மற்றும் ஆரத்தி செய்தார். மந்திரங்கள் முழங்கியபடி பிரதமர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தார். இந்த முக்கியமான நிகழ்வின் ஆன்மீக விழாவைத் தொடர்ந்து, புனித நந்தியின் சிலைக்கு அருகில் அமர்ந்து, திரு மோடியும் பிரார்த்தனை செய்தார்.

ஸ்ரீ மஹாகல் லோக்கின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் அதற்கான பலகையை பிரதமர் திறந்து வைத்தார். கோவில் துறவிகளை சந்தித்த பிரதமர், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் மஹாகல் லோக் கோயில் வளாகத்திற்குச் சென்ற பிரதமர், நடைபயணம் மேற்கொண்டு சப்திரிஷி மண்டல், மண்டபம், திரிபுராசுர வத் மற்றும் நவ்கர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவபுராணத்தில் உள்ள சிருஷ்டிச் செயல், விநாயகரின் பிறப்பு, சதி மற்றும் தக்ஷனின் கதை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சுவரோவியங்களையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார். பின்னர் திரு மோடி கலாச்சார நிகழ்ச்சி ஒன்றை கண்டுகளித்தார், மானசரோவரில் மல்காம்ப் நிகழ்ச்சியைக் கண்டார். இதைத் தொடர்ந்து பாரத மாதா கோயிலில் தரிசனம் செய்யப்பட்டது.

பிரதமருடன் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

மஹாகலில் பூஜை, ஆரத்தி மற்றும் தரிசனத்திற்கு பிறகு, பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மஹாகால் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மஹாகல் கோயிலின் உள் கருவறையில் பூஜை, ஆரத்தி மற்றும் தரிசனத்திற்கு பிறகு, பொது நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

 பிரதமர் வருகையையொட்டி அவர் கவுரவிக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற பாடகர் திரு கைலாஷ் கெரின் பாடல் மற்றும் ஒளி, ஒலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மஹாகால் கடவுளை வாழ்த்தி தனது உரையை தொடங்கிய பிரதமர், “ஜெய் மஹாகால்! உஜ்ஜயினியின் இந்த ஆற்றல், இந்த உற்சாகம்! அவந்திகாவின் இந்த ஆரவ், இந்த அற்புதம், இந்த ஆனந்தம்! மகாகலின் இந்த மகிமை, இந்த மகத்துவம்! 'மஹாகால லோக்'கில் உலகியல் எதுவும் இல்லை என்று கூறினார்.

ஜோதிடத்தில் கணித்தபடி,  உஜ்ஜயினி இந்தியாவின் மையமாக மட்டுமல்லாமல், ஆன்மாவின் மையமாகவும் உள்ளது என்று பிரதமர் கூறினார். உஜ்ஜயினி என்பது ஏழு புனித புரிகளில் ஒன்றாகக் கருதப்படும் நகரம் மற்றும் பகவான் கிருஷ்ணரே கல்வி கற்க வந்த இடமாகும் என்று தெரிவித்தார்.   “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செல்வம் மற்றும் செழிப்பு, அறிவு மற்றும் கண்ணியம், நாகரிகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் உஜ்ஜைனி  முன்னணியாக திகழ்ந்தது.

"வெற்றியின் உச்சத்தை அடைய, நாடு அதன் கலாச்சார உயரங்களைத் தொட்டு, அதன் அடையாளத்துடன் பெருமையுடன் இருப்பது அவசியம்" என்று பிரதமர் விளக்கினார். விடுதலை அமிர்த காலத்தில் இந்தியா "அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை" மற்றும் "நமது பாரம்பரியத்தில் பெருமை" போன்றவைகளுக்கு  அழைப்பு விடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்  சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் புதிய சாதனைகளை படைத்து வருவதாக கூறிய அவர், உத்தரகாண்டில் உள்ள பாபா கேதாரின் ஆசியுடன் கேதார்நாத்-பத்ரிநாத் யாத்திரை பகுதியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

 ஜோதிர்லிங்கங்களின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை பிரதமர் விளக்கினார்.   “நமது ஜோதிர்லிங்கங்களின் இந்த வளர்ச்சி இந்தியாவின் ஆன்மீக ஒளியின் வளர்ச்சி, இந்தியாவின் அறிவு மற்றும் தத்துவத்தின் வளர்ச்சி என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.     தெற்கு நோக்கியிருக்கும் ஒரே ஜோதிர்லிங்க பகவான் மஹாகால் என்றும், பாஸ்ம ஆரத்தி உலகம் முழுவதும் பிரபலமான சிவனின் வடிவங்கள் என்றும் பிரதமர் விளக்கினார்.

நாட்டின் ஆன்மீகத்தின் பங்கைப் பற்றி மேலும் விவரித்த திரு மோடி, “இது நமது நாகரிகத்தின் ஆன்மீக நம்பிக்கையாகும், இதன் காரணமாக இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. நமது நம்பிக்கையின் இந்த மையங்கள் விழித்திருக்கும் வரை, இந்தியாவின் உணர்வு விழித்திருக்கும், இந்தியாவின் ஆன்மா விழித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

வரலாற்றை நினைவு கூர்ந்த பிரதமர், உஜ்ஜயினியின் ஆற்றலை அழிக்க முயற்சி செய்த இல்துமிஷ் போன்ற படையெடுப்பாளர்களைப் பற்றி பேசினார். கடந்த காலங்களில் இந்தியாவை சுரண்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் மோடி நினைவு கூர்ந்தார்.

ஆன்மிகம் மற்றும் கல்வி குறித்து பேசிய பிரதமர், காசி போன்ற ஆன்மீக மையங்கள் மதத்துடன் அறிவு, தத்துவம் மற்றும் கலையின் தலைநகராகவும், உஜ்ஜயினி போன்ற இடங்கள் வானியல் தொடர்பான ஆராய்ச்சி மையங்களாகவும் இருந்ததை சுட்டிக்காட்டினார். "இன்று நாம் வானியல் துறையில் உலகின் பெரிய சக்திகளுக்கு சமமாக நிற்கிறோம்." என்றும் சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற இந்தியாவின் விண்வெளிப் பயணங்களை பிரதமர் சுட்டி காட்டினார்.  “பாதுகாப்புத் துறையில், இந்தியா முழு பலத்துடன் தன்னிறைவை நோக்கி நகர்கிறது என்றும், விளையாட்டு முதல் ஸ்டார்ட்அப் வரை இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

"புதுமை கண்டுபிடிப்புகள் இருக்கும் இடங்களில் புதுப்பித்தல் இருக்கும்" என்று பிரதமர் கூறினார். அடிமைத்தனத்தின் ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், “இந்தியா தனது பெருமை, கெளரவம் மற்றும் மரபு சார்ந்த இடங்களை புதுப்பித்து அதன் பெருமையை மீட்டெடுக்கிறது”  

 முன்னதாக, உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், சத்தீஸ்கர் ஆளுநர் திருமதி அனுசுயா உய்கே, ஜார்கண்ட் ஆளுநர் திரு ரமேஷ் பெயின்ஸ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு டாக்டர் வீரேந்திர குமார், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள், திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் திரு பிரஹலாத் படேல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த