முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானதென மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

பொறுப்பான ஊடக நிறுவனங்கள், பொது நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கொள்கையாக வைத்திருக்க வேண்டும்: திரு அனுராக் தாக்கூர்

உண்மையான தகவல்களை வழங்குவது ஊடகங்களின் முதன்மைப் பொறுப்பு என்றும், தகவல்கள் பொது களத்தில் வைக்கப்படுவதற்கு முன்பு உண்மைகளை சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.


ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு யூனியன் பொதுச் சபை 2022-ன் தொடக்க விழாவில் இன்று பங்கேற்றுப் பேசிய அமைச்சர், மக்களுக்கு தகவல் சொல்லப்படுவதன் வேகம் முக்கியமானது என்பதும் துல்லியம் அதைவிட முக்கியமானது என்பதும் செய்தியாளர்களின் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்றார். சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரவலாகியுள்ள நிலையில் அவற்றில் போலி செய்திகளும் பெருகிவிட்டன என்று அமைச்சர் மேலும் கூறினார். இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை தடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்கும் இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்தில் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொறுப்பான ஊடக நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். பொது ஒலிபரப்பு சேவை நிறுவனங்களான தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதற்காகவும், உண்மையான செய்திகளை வழங்குவதற்காக அவை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். தேசிய பேரிடர்களின் போது பேரிடர் மேலாண்மையில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். உயிர்களைக் காப்பாற்றுவதில் நேரடியாகப் பணிபுரிவதால், நெருக்கடிக் காலங்களின் போது ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்19 தொற்றுநோய்க் காலத்தின்போது வீடுகளில் முடங்கித் தவித்த மக்களுக்கு ஊடகங்கள் உதவிகரமாக இருந்ததாக கூறிய திரு அனுராக் தாக்கூர், மக்களை வெளி உலகத்துடன் ஊடகங்கள் இணைத்ததாகக் கூறினார். குறிப்பாக தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் பொதுவாக இந்திய ஊடகங்களும் செய்த சிறந்த பணிகளை அவர் இந்த மாநாட்டின்போது எடுத்துரைத்தார்.  தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி, தங்கள் பொது சேவைப் பணியை மிகவும் திருப்திகரமாக வழங்கியதாகவும் பெருந்தொற்றுக் காலத்தின் போது அவை மக்களுடன் உறுதியாக நின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  பொதுவாக கொவிட்-19 விழிப்புணர்வுத் தகவல்கள், முக்கியமான அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களுடனான இலவச ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி அவை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள அனைவரையும் சென்றடைவதை இந்திய ஊடகங்கள் உறுதி செய்ததாக அவர் கூறினார். பிரசார் பாரதி, கொவிட் 19 காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை இழந்தபோதிலும் அது தனது பொது சேவையைத் தொடர்ந்து தடையின்றி மேற்கொண்டது என அமைச்சர் கூறினார்.

அரசு நிர்வாகத்தில் பங்காற்றுமாறு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்த திரு அனுராக் தாக்கூர், "ஊடகங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட வேண்டும் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய அளவில் தொடர்ச்சியான பின்னூட்டக் கருத்துக்களை வழங்க வேண்டும்" என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளை இந்த கூட்டத்தின் போது வலியுறுத்தினார். ஒலிபரப்பு நிறுவனங்களின் சங்கமாக ஏபியூ எனப்படும் ஆசிய பசிபிக் ஒலிபரப்பு யூனியன் தொடர்ந்து செயல்பட்டு, ஊடகங்களுக்கு புதிதாக வருபவர்களுக்கு சிறந்த தொழில்முறை திறன்களை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஏபியூ உறுப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் பிரசார் பாரதியின் உயர்நிலைப் பயிற்சி நிறுவனமான என்ஏபிஎம், ஒலிபரப்புத் துறையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பயிற்சிகளை வழங்குவதில் ஏபியூ மீடியா அகாடமியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்படுகிறது என்று அவர் கூறினார். இந்தியா சுமார் 40 நாடுகளுடன் உள்ளடக்க பரிமாற்றம், கூட்டு நிகழ்ச்சித் தயாரிப்புகள், திறன் மேம்பாடு போன்றவற்றில் இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அவற்றில் சக ஏபியூ நாடுகளான ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, மாலத்தீவுகள், நேபாளம், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்டவை அடங்கும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிப் பகிர்வுக்காக மார்ச் 2022 இல் ஒலிபரப்புத் துறையில் ஆஸ்திரேலியாவுடன் கூட்டு செயல்பாடுகளை இந்தியா ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் ஒலிபரப்பாளர்களும் பல வகை நிகழ்ச்சிகளின் இணை தயாரிப்பு மற்றும் கூட்டு ஒலிபரப்பு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் என்றும் திரு அனுராக் தாக்கூர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏபியூ தலைவர் திரு. மசகாகி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏபியூ ஆற்றிவரும் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டினார். மேலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் இந்தப் பிராந்தியத்தின் அனைத்து பொது சேவை ஒலிபரப்பாளர்களும் இணைந்து செயல்படுவதை அவர் பாராட்டினார்.

இந்தியாவின் பொதுசேவை ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி 59-வது ஏபியூ பொதுசபை கூட்டத்தை நடத்தியது. மக்களுக்கு சேவை செய்தல்: நெருக்கடி காலங்களில் ஊடகங்களின் பங்கு என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

இதில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு.எல்.முருகன், தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு.அபூர்வ சந்திரா உள்ளிட்டோரும், 40 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த