முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதைக்கும், மெட்டுக்குமிடையே இணைப்பிருக்க வேண்டும்: பிரசூன் ஜோஷி

கவிதைக்கும், மெட்டுக்குமிடையே இணைப்பிருக்க வேண்டும்: பிரசூன் ஜோஷி

கவிஞரின் கவிதை வரிகளுக்கும், இசையமைப்பாளரின் மெட்டுக்கும் இடையே இணைப்பு இருந்தால் தான் சிறந்த பாடலாக அது அமையும் என்று கவிஞர் பிரசூன் ஜோஷி கூறியுள்ளார்.  கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய அவர், கவிஞருக்கும், இசையமைப்பாளருக்கும் இடையிலான உறவு ஒத்திசைவாக இருப்பதுடன், ஒன்றுக்கு ஒன்று பாராட்டும் படியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கவிதை  புனையும் கலை என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய புகழ் பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான பிரசூன் ஜோஷி,  உண்மைத்தன்மை’ என்பது ஒரு கவிஞரின்  மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும் என்று கூறினார். “உன்னைப்போல யாரும் இல்லை, நீ தனித்துவமான இணையற்றவன். ஒரு கவிஞன் எப்போதும் தனது சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது சொந்த நடையில் எழுத வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

என்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது பூமி மற்றும் கலாச்சாரத்துக்கு சொந்தமானதாகும். நமது வளர்ப்பும், கலாச்சாரமும் நமது எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். நான் என்னுடைய வார்த்தைகளையும், உவமை மற்றும் உருவகங்களையும், எனது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தில் இருந்தே கடன் வாங்குகிறேன். நமது சொந்த மொழியில் வார்த்தைகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு எந்தளவுக்கு நவீனமாக இருந்தாலும், அது படைப்பாற்றலுக்கும், மனிதனின் அறிவுக்கூர்மைக்கும் மாற்றாக இருக்க முடியாது என்றார்.

அண்மைக்கால ஆபாசக்கவிதைகள் குறித்து பிரசூன் ஜோஷி,  சந்தையில் தேவையிருக்காவிட்டால் எதையும் திணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வித படைப்பாளர்களைப்போல வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இதில் சமமான  பொறுப்பு உள்ளது என்று கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் இந்த கலந்துரையாடலை நெறியாளுகை செய்தார்.தகப்பனார்-மகன் இடையேயான உறவை எடுத்துக்காட்டும் ஒடியா திரைப்படம் பிரதிக்ஷியாவை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் அனுபம் கர் அறிவித்தார்

தகப்பனார்-மகன் இடையேயான உறவை எடுத்துக்காட்டும் ஒடியா திரைப்படம் பிரதிக்ஷியாவை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் இந்தி திரைப்பட நடிகர் அனுபம்கேர்  அறிவித்தார்.

அந்த திரைப்படத்தின் தகப்பனார் வேடத்தில் தாம் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.  அப்போது திரைப்பட உரிமையின் முன்தொகைக்கும் கையெழுத்திட்டு பிரதிக்ஷியா திரைப்பட இயக்குநர் அனுபம் பட்நாயக்கிடம் அவர் வழங்கினார். பின்னர் பேசிய இயக்குநர் அனுபம் பட்நாயக், இத்தருணம் எங்களுக்கும் ஒடிசா மக்களுக்கும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.காஷ்மீர் பண்டிட்களின் சோகத்தை ஆவணப்படுத்தும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மூலம் குணப்படுத்தும் நடைமுறை தொடங்கியது : அனுபம் கெர்


1990-களில் காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த சோகத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உதவியுள்ளது என்று இந்தத் திரைப்படத்தின் முன்னணி நடிகர் அனுபம் கெர் கூறினார். கோவாவின் பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற இஃப்பி  மேசைப் பேச்சில் அவர் பங்கேற்றார்.

“இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இப்படத்திற்காக உலகம் முழுவதும் சுமார் 500 பேரை பேட்டி எடுத்தார். 1990 ஜனவரி 19 இரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து 5 லட்சம் காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஒரு காஷ்மீரி இந்துவாக, நான் சோகத்துடன் வாழ்ந்தேன். ஆனால் அந்த சோகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த சோகத்தை உலகம் மறைக்க முயன்றது. சோகத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் இப்படம் குணப்படுத்தும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது" என்று அனுபம் கெர் மேலும் கூறினார்.

தாம் அனுபவித்த ஒரு சோகத்திற்கு உயிர் கொடுக்கும் நடைமுறையை நினைவுபடுத்திய அனுபம் கெர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் தனக்கு ஒரு படம் மட்டுமல்ல, தாம் திரையில் சித்தரித்த ஓர் உணர்ச்சி என்றார். " தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை நான் பிரதிநிதித்துவம் செய்வதால், அதைச்  சிறந்த முறையில் வெளிப்படுத்துவதை பெரிய பொறுப்பாக நான் கருதுகிறேன். இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் என் கண்ணீர், என் கஷ்டங்கள் அனைத்தும் உண்மையானவை” என்று அவர் விவரித்தார்.


இந்தப் படத்தில் நடிகராக தனது திறமையைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நிஜ வாழ்க்கைச் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிப்படுத்த தனது ஆன்மாவைப் பயன்படுத்தியதாக அனுபம் கெர் மேலும் கூறினார். நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே படத்தின் முக்கிய கருப்பொருள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். "நம்பிக்கை எப்போதும் வீண்போகாது," என்று அவர் கூறினார்.


வளர்ந்துவரும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஓர் அறிவுரையாக, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார். “அதற்கு பதிலாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படம் செய்யும் இந்திய திரைப்படத் துறையின் தயாரிப்பாளர்களாக அடையாளம் காண வேண்டும். இது வாழ்க்கையை விட பெரிய திரையுலகம்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்