முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி-20 மாநாடு தொடர்பாக புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் , ஜி-20 மாநாடு தொடர்பாக புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,


நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு உருவாக்கியுள்ள 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' போன்ற முக்கியக் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்

தமிழகத்தில் ஜி20 நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோயமுத்தூரில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் கோயமுத்தூர் ஈஷா மையத்தில் ஜி-20 நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்ததற்கு     

 தமிழ்நாடு அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோயமுத்தூர் நிகழ்ச்சிகள் தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜி-20 உச்சிமாநாடு தொடர்பாக நேற்று  புதுதில்லியில் நடைபெறவுள்ள



அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்ற நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  பங்கேற்றார்


ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்தாண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ததன் படி, ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.





பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே, சந்திரபாபு நாயுடு, உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் நடைபெறவுள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.




ஜி-20 மாநாடு நடத்துவதற்கு முன்பு துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“எனது அன்பு நண்பர் @EmmanuelMacron அவர்களுக்கு நன்றி! ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், இந்தியாவின் G20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வாழ்த்து ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். @kishida230.

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வாழ்த்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவரது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“உங்கள் கனிவான பணிகளுக்கு நன்றி @sanchezcastejon அவர்களே! வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த கிரகத்தை விட்டுச் செல்ல நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள கூட்டாகச் செயல்படுவது குறித்த உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்”

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரு. மோடி தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“நன்றி @CharlesMichel அவர்களே!. உலகளாவிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் கூட்டாகச் செயல்படும்போது உங்களின் தீவிரப் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்.”

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“நன்றி @POTUS அவர்களே. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு மேலும் பலம் அளிக்கும். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.”இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“எனது அன்பு நண்பர் @EmmanuelMacron அவர்களுக்கு நன்றி! ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், இந்தியாவின் G20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வாழ்த்து ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். @kishida230.

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வாழ்த்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவரது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“உங்கள் கனிவான பணிகளுக்கு நன்றி @sanchezcastejon அவர்களே! வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த கிரகத்தை விட்டுச் செல்ல நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள கூட்டாகச் செயல்படுவது குறித்த உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்”

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரு. மோடி தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“நன்றி @CharlesMichel அவர்களே!. உலகளாவிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் கூட்டாகச் செயல்படும்போது உங்களின் தீவிரப் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்.”

இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“நன்றி @POTUS அவர்களே. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு மேலும் பலம் அளிக்கும். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...