முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா ம க பொதுக்குழுவில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த தீர்மானம்

2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே மணி, பேராசிரியர் தீரன், வழக்கறிஞர் பாலு, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண் மோடிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளின் உழைப்பு சம்பந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இயற்றிய ஆத்திசூடியை அறிமுகப்படுத்தி வாசித்து காட்டினார். தொடர்ந்து பாமக பொதுக்குழுவின் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன.



 தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

மே மாதம் 5 ஆம் தேதி  சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். பிரதமர் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். ஒரு கட்சி என்பது எம்பி,எம்.எல்.ஏ.க்களை வைத்து அல்ல, மக்களுக்கு என்ன செய்துள்ளனர் என்பது தான் முக்கியம். பா.ம.க. இல்லை என்றால் தமிழகத்திற்கு சமச்சீர் கல்வி வந்து இருக்காது, லாட்டரி ஒழிந்து இருக்காது, இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி, 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது, ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம் என்று கூறினார்.




காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பா.ம.க. சேர்ந்து விடுமா..? என கேட்கிறார்கள். நமது இலக்கு தமிழக வளர்ச்சி தான் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் வேளாண் மண்டலம் அமைக்க கோரினோம். பா.ம.க.வின் வெற்றி இது. ஆனால் அங்கிகாரம் கிடைக்கவில்லை. டெல்டா மக்களே ஓட்டு போடலை. நம்ம கூட்டணிக்கே போடலை. இப்ப புரிந்து வருகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.



இப்ப நமக்கு ஏத்த அரசியல் சூழல்  இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். தினமும் மீடியா பார்கிறார். வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர். அ.தி.மு.க. 4 துண்டாகி விட்டது. தி.மு.க. விளம்பரம் தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி. 35 ஆண்டுகளாக கட்சியை அய்யா வெற்றி கரமாக நடத்தி வருகிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடுகிறோம். தமிழகத்தில் வன்னிய சமூதாயம் 20% தாழ்த்தப்பட்டோர் 20% தான்..இதில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறி வருகின்றனர். ஆனால் வன்னிய சமூதாயம் முன்னேற வில்லை. அந்த ஒரே காரணத்திற்கு கூட்டணி சேர்ந்தோம். 10.5% கிடைத்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்தது. இது பற்றி பலமுறை முதல் அமைச்சரிடம் பேசியுள்ளார். நானும் பலமுறை பேசியுளேன். இதில் ஜாதி பிரச்னை இல்லை. ஒரு சமுதாய பிரச்னை. இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் 10.5 சதவிதம் வரும்

நிலக்கரியை விட தரம் குறைவான லிக்னைட்டை எடுக்க 25,000 ஏக்கர் விளைநிலங்களை பிடுங்க முயற்சி எடுக்கிறார்கள். நாம் தான் தடுக்க போராடி வருகிறோம். இப்ப தான் சில பேர் நாங்க தான் என வருகிறார்கள். 25,000 ஏக்கர் நிலத்தை பிடுங்க முயற்சி நடக்கிறது. இதற்கு இரண்டு அமைச்சர்கள் வேறு ஆதரவு தருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இருப்பதால் செய்கிறீர்களா....? இதிலுமா ஜாதி.? விரைவில் தனியார் கைக்கு NLC போக இருக்கிறது. "A" என துவங்கும் நிறுவனம் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சட்ட அமைச்சர் விளக்கம் கொடுத்து விட்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் தினமும்  200 கோடி ரூபாய் லாபம் பார்க்கிறார்கள். உயிரும் போகிறது. இதன் பிறகு ஆளுநருக்கு உணர்வில்லையா..? சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்டு கோப்பை அனுப்பி இருக்கலாம்.

தமிழகம்-புதுச்சேரியிலும் பா.ம.க. நிர்வாகிகள் வேகமாக நியமிக்க படுகிறார்கள். இது விரைவில் முழுமை பெரும். 40 தொகுதிகளிலும் மாஸ் அட்டாக் என அய்யா உத்தரவிட்டுள்ளார். அதனை நோக்கி நாம் செல்கிறோம். ஒவ்வொரு எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் 3 நாட்கள் நான் செல்கிறேன். தேர்தலுக்கு தயாராகிறோம்.  இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி, 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது, ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம் என்று கூறினார்.

காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பா.ம.க. சேர்ந்து விடுமா..? என கேட்கிறார்கள். நமது இலக்கு தமிழக வளர்ச்சி தான் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் வேளாண் மண்டலம் அமைக்க கோரினோம். பா.ம.க.வின் வெற்றி இது. ஆனால் அங்கிகாரம் கிடைக்கவில்லை. டெல்டா மக்களே ஓட்டு போடலை. நம்ம கூட்டணிக்கே போடலை. இப்ப புரிந்து வருகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.வேறு வழியில்லை:

இப்ப நமக்கு ஏத்த அரசியல் சூழல்  இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். தினமும் மீடியா பார்கிறார். வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர். அ.தி.மு.க. 4 துண்டாகி விட்டது. தி.மு.க. விளம்பரம் தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி. 35 ஆண்டுகளாக கட்சியை அய்யா வெற்றி கரமாக நடத்தி வருகிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்....

"விடியலுக்காக காத்திருக்கிறோம்.. விடியலுக்கு வெகுதூரமில்லை" என மட்டும் கூறி பா.ம.க. பொது குழுவில் தனது நிறைவுரை டாக்டர்  ராமதாஸ் முடித்து கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த