முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

மனித உரிமைகள் தொடர்பான உணர்திறன் மற்றும் கருணையை வளர்ப்பதே மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சம்: குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு

புது தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் இன்று (டிசம்பர் 10, 2022) ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) 1948 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு முக்கியமான நிகழ்வு என்று அவர் கூறினார். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (யுடிஹெச்ஆர்) ஆவண விளக்கங்கள் 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் இது வரலாற்றில் மிகவும் அதிக அளவில்


மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் பல பகுதிகளில் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான மோசமான நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, ஐநா-வின் இந்த பிரகடனம் மொழிபெயர்க்கப்பட்டு அது புரிந்து கொள்ளப்பட்டதா என்று ஆச்சரியப்படும் நிலை உள்ளது என்று அவர் கூறினார். மனித உரிமைகள் என்பது உலகம் முழுவதுமானதுக்கான செயல்திட்டப் பணியாக உள்ளது என்பதுதான் உண்மை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடையலாம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இப்போது தனது 30 வது ஆண்டில், அடி எடுத்து வைத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பு மனித உரிமைகளுக்கான பல்வேறு உலகளாவிய மன்றங்களில் பங்கேற்கிறது என்றும் இந்தியாவின் பணி சர்வதேச அளவில் பாராட்டப்படுவது பெருமை அளிப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

மனித உரிமைகள் தொடர்பான உணர்திறன் மற்றும் கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  இது அடிப்படையில் கற்பனைத் திறன் தொடர்பான ஒரு நடவடிக்கையாகும் என்று கூறிய அவர், மனிதர்களை விட குறைவாக நடத்தப்படுபவர்களின் இடத்தில் நம்மை கற்பனை செய்து பார்க்க முடிந்தால், அது நம் கண்களைத் திறந்து, மனித உரிமைகள் தொடர்பாக தேவையானதைச் செய்ய நம்மைத் தூண்டும் என்று கூறினார். "பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள்" என்ற முக்கியமான 'தங்க விதி' ஒன்று உள்ளது என அவர் தெரிவித்தார். இந்த வாசகம் மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் வெளியிடப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் உலக அளவில் இன்று தொடங்கியுள்ளதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை 2022-ம் ஆண்டின் கருப்பொருளாக 'அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி' என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுவதாகவும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நீதியின் சுற்றுச்சூழல் பரிமாணத்தை நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது என்று கூறிய குடியரசுத் தலைவர் அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது என்று கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா எண்ணற்ற புனித ஏரிகள், ஆறுகள் மற்றும் மலைகள் கொண்ட புனிதமான புவியியல் நிலப்பரப்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலப்பரப்புகளுக்கு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வளமான பல்லுயிர்த் தன்மையைச் சேர்க்கிறது என்று அவர் கூறினார். பழங்காலத்தில், நமது ஞானிகளும், அறிஞர்களும், நம்முடன் அவை அனைத்தையும் சேர்த்து, உலகளாவிய முழுமைக்கான அம்சத்தின் ஒரு பகுதியாகவே பார்த்ததாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே, மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம், ஒவ்வொரு மனிதனையும் நம்மிடமிருந்து வேறுபடுத்துவது அல்ல எனக் கருதுவதைப் போலவே, முழு உலகத்தையும் அதன் வாழ்விடத்தையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

“நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் மரங்கள் பேச முடிந்தால் நமக்கு என்ன சொல்லும்? மனித வரலாற்றைப் பற்றி நமது நதிகள் என்ன சொல்லும்? மனித உரிமைகள் என்ற தலைப்பைப் பற்றி கால்நடைகள் என்ன சொல்லும்?” என்று தாம் ஆச்சரியத்துடன் எண்ணுவதாக தமது கருத்துகளைக் குடியரசுத் தலைவர் பகிர்ந்து கொண்டார். நீண்ட காலமாக அவைகளின் உரிமைகளை மறுத்து விட்டோம் என்றும் அதன் விளைவுகள் இப்போது நம் முன் வந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது தார்மீகக் கடமை மட்டுமல்ல என்றும் அது நம் வாழ்வுக்கும் அவசியமானது எனவும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த