முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் முக்கிய அம்சமாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் திகழும் என மத்திய அமைச்சர்

நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாகத் திகழும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் திகழும் என்றும், அனைத்து முயற்சிகளிலும் நுகர்வோரை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோர் நலனுக்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதற்காகவும், சிறந்த சாதனைகளுக்காகவும் இத்துறையை அமைச்சர் பாராட்டினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்கள், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் முயற்சிகளுக்காக அவற்றையும் அவர் பாராட்டினார். புகார்களுக்காக உதவி எண்களை அணுகுபவர்கள் பெரும்பாலும் சிறிய நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் என்றும், பிற இடங்களில் உதவி பெற முடியாதவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பல்வேறு செயல்முறைகளில் கவனம் செலுத்துவதற்கும், சரியான நேரத்தில் நீதியை வழங்குவதற்கும் அவர்களுக்கு உதவ மிகவும் திறம்பட்ட அணுகுமுறையுடன் கூடுதல் முயற்சியை மேற்கொள்வது நம் அனைவரது கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்றைய கருப்பொருள், “நுகர்வோர் ஆணையங்களில் உள்ள வழக்குகளைத் திறம்படத் தீர்ப்பது” என்று குறிப்பிட்ட அமைச்சர், புகார் அளித்த நுகர்வோருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் விரைவான நீதியை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட அரசின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், வணிகத்துறையினர் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் ஆகிய இரண்டையும் எளிதாக்க அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

நுகர்வோர் விவகாரத் துறையின் முன்முயற்சிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட மூன்று முக்கியமான கருப்பொருள்களைப் பிரதிபலிப்பதாக திரு. பியூஷ் கோயல் எடுத்துரைத்தார். “ஒன்றுபடுதல், திறன் மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்றம்” ஆகிய மூன்று அவை என அவர் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கும், வணிகத் துறையினருக்கும், சாமானிய மக்கள் நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அமைச்சர் பேசினார். கடந்த சில ஆண்டுகளில், 1500-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன எனவும் சுமார் 39,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பல சிறிய செயல்பாடுகள் குற்றமற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எளிதில் வணிகம் செய்வதற்கும், வாழ்வை எளிதாக்குவதற்கும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் வகையில், ‘ஜன் விஸ்வாஸ்' (விதிமுறைகள் திருத்தம்) மசோதா- 2022 என்ற விரிவான மசோதாவை அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்தது என்றும் அவர் கூறினார்.

19 அமைச்சகங்கள் தொடர்பான பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விதிகள் இந்த மசோதாவின் மூலம் குற்றமற்றவையாக மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அரசின் அணுகுமுறையுடன் இது ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.

திறன் மேம்பாடு குறித்துப் பேசிய திரு பியூஷ் கோயல், மிஷன் கர்மயோகி எனப்படும் கர்ம யோகி இயக்கம் பற்றிப் பேசினார். மக்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக நாமே நம்மைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கான ஒரு தனித்துவமான முயற்சி இது என்று அவர் தெரிவித்தார். நுகர்வோர் குறைகள் நிவர்த்தி செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள 3000 பேருக்கும் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அவர்களால் நுகர்வோரின் குறைகளை திறம்பட மற்றும் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்து நீதி வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் விழிப்புணர்வுத் திட்டங்களை கடைசி மனிதனுக்கும் எடுத்துச் செல்ல, இதே போன்ற சில திட்டங்களை உருவாக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

பருவநிலை மாற்றம் குறித்து அமைச்சர் கூறுகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு பங்களிப்பை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். 'மிஷன் லைஃப்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த பூமியையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பணிகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், நுகர்வோர் உதவி எண்கள் போன்ற பிற முயற்சிகளுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் நுகர்வோர் விவகாரத் துறையை அவர் பாராட்டினார். முன்னதாக 2 மொழிகளில் மட்டுமே இருந்த தேசிய உதவி எண் (ஹெல்ப்லைன்), இன்று மேலும் 7 மொழிகளை இணைத்துள்ளதாகவும், தற்போது 12 மொழிகளில் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அவரவர் தாய்மொழியில் உரையாடும் வகையில் பரந்த நுகர்வோர் தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 'டி' (T)கள் எனப்படும் தொழில்நுட்பம் (Technology), பயிற்சி (Training) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) ஆகியவை நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோருக்குச் சிறந்த சேவையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.

ஜான் எஃப் கென்னடி கூறியதை மேற்கோள் காட்டி, "நுகர்வோருக்கு தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்பட்டால், நுகர்வோர் தகவல் தெரிந்த அடிப்படையில் பொருட்களைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவர்களது பணம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் தேசிய நலன் பாதிக்கப்படுகிறது" என்று அவர் கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நல்ல தரம் மற்றும் பொருட்களின் சரியான விலை ஆகியவை தொடர்பாக நுகர்வோர் அதிக அளவில் கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நம் அனைவரின் கூட்டு முயற்சியால், ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த