முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.

முன்னால் தமிழ்நாடு முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு.



காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , வி என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதில் ஜெ.ஜெயலலிதா காலமானதால் . மற்ற மூவரும் கர்நாடக மாநில சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்  தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மூவரும் விடுதலையாகினர். வழக்கு விசாரணையின் போது, ஜெ.ஜெயலலிதாவின் வீட்டிலிருந்த 27 வகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகளும் அடங்கும். இவை 2011-ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களில் புடவைகள், காலனி, சால்வைகள் ஆகியவற்றை ஏலம் விடக் கோரி வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி தொடர்ந்த வழக்கு  பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டத்தையடுத்து  உரிய வகையில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதி இராமச்சந்திர டி.ஹுத்தார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சரியானதென நீதிபதி தீர்ப்பளித்தார். கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்திலுள்ள காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் நடத்த சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.ஜெ.ஜெயலலிதாவின் சொத்துகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கிய சொத்துக் குவிப்பு வழக்கில் அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை வருகிறது,


 27.9.2014- அம் நாளில் அப்போது முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா நடராசன், வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 5.12.2016- ஆம் நாளில் ஜெ. ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 14.2.2017- ஆம் நாளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், தீர்ப்பின்போது ஜெ.ஜெயலலிதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தததில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என கேட்கப்பட்டிருந்தது. இந்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 28.9.2018- அம் தேதியில் தள்ளுபடி செய்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகள் என்னவாகும் என்கின்ற  நிலையில், தற்போது அவரது சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி


அது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து, வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டதில், மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொத்துகள் இருப்பின் அது குறித்த விவரத்தையும், இல்லை என்றால், ‘இனம் இல்லை’ என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.குறித்து ஜெ.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் (1998 - 2001) வாதாடிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.வி.சோமசுந்தரம் கருத்தாக :- உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளிவந்தபோது ஜெ.ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் மட்டுமே அவரது பெயர் தீர்ப்பில் இடம்பெறவில்லை. மற்றபடி ஏற்கெனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தண்டனை பெற்ற பின்னர் குற்றவாளி உயிரோடு இல்லை என்றாலோ அல்லது தலைமறைவாகி விட்டாலோ ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வருவாய் மீட்பு சட்டத்தின் படி (Revenue Recovery Act ) சொத்துகளை கணக்கெடுப்பு செய்து, அதனை பொது ஏலம் நடத்தி நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்  தான், தற்போது இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,