முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக பாஜகவில் நடக்கும் ஜாதிய ஆதிக்கப்போட்டியில் தனிப்பட்ட நபர்களின் விமர்சனத்திற்கு வரும் தவறுகள்

பாஜகவில் நடக்கும் ஜாதிய ஆதிக்கப்போட்டியில்


ஒருவரின் தனிப்பட்ட தவறை அரசியல் ரீதியில் விமர்சனம் செய்வது சமீப காலமாக அதிக அளவில் வருவதற்கு காரணம் தமிழகத்தில் இதுவரை தனிப்பெரும் கட்சியாக இருந்த முன்னால் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா காலத்தில் வளர்ந்த நிலையில் இருந்த அதிமுக தற்போது ஜெ. ஜெயலலிதா  மரணத்திற்குப் பின் ஐந்து பிரிவாகப் பிளவு பட்ட நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் தாயில்லாப் பிள்ளை போல தடுமாறி வரும் நிலையில் அரசியல் சாராத இதுவரை இருந்த அரசியல் தெரியாத சுய விளம்பரப் பிரியர்களும், தங்களின் தவறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பலரும்  தற்போது பாஜகவில் கட்சிப் பணி என்னும் பொறுப்புகள் பலருக்கும் வழங்குவதால், தகுதி இல்லாத பல நபர்கள் தங்களை அதிகாரம் படைத்த நபர்கள் போல  செயல்பட்டு பலர்



கட்டப்பஞ்சாயத்துக்கள் செய்தும் வருகிற நிலை உள்ளன, அதனால்  அங்கு திருவிழாக் கடைத்தெருவில் கூடுவது போல் கூடும் நிலை அதை வைத்து  அக்கட்சி வளர்ந்து விட்டதாகப் பலர் கொக்கரிக்க உண்மை அதுவல்ல, ஏன்பதை அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவர்,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நபர்களின் புகழிடம் போல தமிழகத்தில் தற்போது பாஜக நிலை தற்போது உள்ளது. அங்கிருந்து பார்க்கும் பலருக்கு அது புரியாது ,  அக்கட்சி வளர்ந்து விட்டதாகக் கருதினால் பல உதிரிக் கட்சிகளை கூட்டணி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை  அதில் பல பிரபலமில்லாத துணை நடிகைகளும் அடக்கம் அப்படி உள்ள பலரில் ஒருவர் தான் நடன இயக்குநர் ரகுராமின் மகளான நடிகை காயத்ரி இவர் தான் சார்ந்த அந்தணர் சமூகத்தில் எஸ் வி சேகர் போல ஒரு வட்டத்தில் வாழ்ந்து அரசியலுக்கு வந்தவர்  காயத்திரி ரகுராம் ஆவார்.


 யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து அதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மக்கள் ஆதரவு தந்து அரசியல் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே சரியான நிலை ல. சமூக வலைதளம் மற்றும்  பொதுத்தளத்தில் எதையும் பேசலாம் என்றில்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இதுவரை இருந்த  பாஜக அதன் மேல் தலைமையான ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் மற்றும் தலைமை கட்சியை வழிநடத்திச் செல்கிறது. குறிப்பாக தொண்டர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடித்தள தொண்டர்களிடம் காட்டும் அன்பும், அக்கறையும் வெகுவானோரைக் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் இதுவரை இருந்த. அந்தண சமூக முத்திரை விலக மாற்றாக பிறமக்கள் அக் கட்சி அதிகாரப் போட்டி நிலவும் நிலைதான் .பாஜகவில் கட்டுப்பாடுகள் உண்டு தவிர, கண்டிப்பு என்பது  கிடையாது. 



அதனைப் பயன்படுத்திக் கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து சமூக வளைதளத்தில் பாஜக கட்சிக்கும், அவர்கள் கொள்கைக்கும் எதிரான ட்வீட்களை பதிவிட்டு வந்தார். 

பாஜக களப் பணியில் பெண் நிர்வாகிகள் எதையுமே செய்யமுடியாது என்பது போல் தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் செய்து வந்தது மாநிலத் தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்போது தான் திருச்சி சூர்யா என்பவர் விவகாரத்தில் எல்லை மீறிய நடிகை காயத்ரி ரகுராமை, கட்சியை விட்டு ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். 


இது நவம்பர் 22 ஆம் தேதியிலிருந்தே பாஜகவிற்கு எதிரான ஊடகங்கள் மற்றும் பதிதாக முளைத்த யு-டியூப் சேனல்களைத் தேடிப் போய் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி கொடுத்தது தலைமையிலிருப்பவர்களைக் கடும் சோதனையில் ஆழ்த்தியது. உது அவர் துபாயில் தங்கியது வரை விமர்சனத்தின் பேரில் உளவுபார்த்து புகாருக்கும் உள்ளானது இதனிடையே தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்ததாகவும் நடிகை காயத்ரி ரகுராம் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியதும் அப்போது செய்திகளில் பரபரப்பாகியது. அன்றிலிருந்து திமுகவில் நடிகை காயத்ரி ரகுராம் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்  திடீரென பாஜகவிலிருந்து விலகுகிறேன் என அறிவித்த நடிகை காயத்ரி ரகுராம், தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் திமுகவிற்கு சிக்னல் கொடுக்கும் விதமாகப் பேசியுள்ளது அவரது முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பாஜக தொண்டர்கள் விமர்சித்தும் வருகின்றனர். 

பாஜக தனக்கு தாய் வீடு மாதிரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது ஒருவர் கூட போன் செய்து பேசாதது வருத்தமளிக்கிறது என்றெல்லாம் பேசிய நடிகை காயத்ரி ரகுராம், நிறைய மன அழுத்தப் பிரச்சனைக்கு ஆளானதால் பாஜகவை விட்டு விலகியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் சேவையாற்ற வேண்டும் ?  !... என்பதே எனது முதல் குறிக்கோள் என்பதால் திமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் இணைவேன், விசிக, நாம் தமிழர் கட்சியிலிருந்து அழைப்பு வந்தால் கூட அந்தக் கட்சிகளில் இணைவேன் எனத் தெரிவித்தார். அதைக் கேட்ட பாஜக தொண்டர்கள் ஓஹோ. அப்படின்னா திமுகவுக்கு தாவுறதுக்கு தான் அன்னைக்கு சபரீசனை சந்தித்து பேசினீங்களா?என விமர்சித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரன் 

இன்பநிதி ஒரு தோழியுடன் இருக்கும் காட்சியை வெளியிட்டது இவர் தான்..! – என நடிகை காயத்திரி ரகுராம்  வெளியிட்ட தகவல் பரபரப்பாகிறது .



இன்பநிதி : ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் அவரது தந்தையும்  நடிகருமான  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதன் மூலம் சினிமா தயாரிப்பாளராக திரைத்துறைக்கு வந்தார்.

அதன்பிறகு திரைப் படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக நடிகர் சந்தானத்துடன் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படம் 

இவருடைய முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த படங்களில்  நடிக்க ஆரம்பித்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை.

மனிதன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்திலும் பார்வையற்றவராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். :இது ஒருபுறம் 

தற்போதய நிலையில் மூன்றாம் தலைமுறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் .

அவருடைய மகன் இன்பன் கால்பந்தாட்டம் தான் அவரது இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்புதான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற ஒரு கால்பந்து அணியின் வீரராக தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் இன்பன் தேர்வாகியிருந்தார்.

இவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில். இன்பன் தன்னுடைய தோழி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில நேற்று முன்தினம்  மதியம் முதல் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.

இந்த புகைப்படங்கள் வெளியாகி தனிப்பட்ட இன்பநிதி  சார்ந்த சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு இருக்கின்றது. இந்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய பிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார்.அதில் அவர் கூறியதாவது தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டீம் வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை விட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்தி இருக்கிறது

இப்படிப்பட்ட அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்..? அடல்ட் வீடியோ ஆடியோ ஃபோட்டோ புகழ் அண்ணாமலை என்று ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. மேலும் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அரசியல் கொள்கை மற்றும் நடவடிக்கை ரீதியாக ஒருவரை தாக்க கற்றுக்கொள்ளவேண்டும் அண்ணாமலை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை தாக்கும் விதமாக பதிவை வெளியிட்டிருக்கிறார் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த