முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம்

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம்,


அனைத்து ஜி 20 நாடுகளும் மூன்று முன்னுரிமைப் பகுதிகளின் குறிக்கோளை நோக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படும் அர்ப்பணிப்புடன் பெங்களூருவில் நிறைவடைந்தது




நிலச் சீர்கேட்டைத் தடுத்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் செழுமைப்படுத்துதல் ஆகிய மூன்று முன்னுரிமைப் பகுதிகளை நோக்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை அனைத்து ஜி20 நாடுகளும் வெளிப்படுத்திய ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் முதலாவது ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம் இன்று பெங்களூரில் நிறைவடைந்தது. பல்லுயிர் பெருக்கம், நீலப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டன.





சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மைப் பணிக்குழுவின் முதல் கூட்டம், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தில் 2023 பிப்ரவரி 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

காட்டுத் தீ தடுப்பு மற்றும் சுரங்கப் பகுதிகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வுடன் முதல் நாள் கூட்டம் தொடங்கியது.





மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி-யின் தொடக்க உரையுடன்  இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. அதன்பின், சுற்றுச் சூழல் அமைச்சகச் செயலாளர் திருமதி லீனா நந்தன் உரையாற்றினார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை ஒருமித்த அணுகுமுறை மூலம் இந்தியா தீர்க்க விரும்புகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மூன்றாவது மற்றும் நிறைவு நாள், கூட்டம் ‘நிலையான மற்றும் பருவநிலைக்கு ஏற்ற நீலப் பொருளாதாரம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட அமர்வுடன் தொடங்கியது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். பெருங்கடல்கள், நீலப் பொருளாதாரம், கடல் குப்பைகள், கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், கடல் சார்ந்த திட்டமிடல்கள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கடலில் பிளாஸ்டிக் குப்பை தொடர்பான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த விவாதங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, மாசுபாட்டைத் தவிர்த்தல், கடல் குப்பைகளைத் தடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

நீலப் பொருளாதாரம் பற்றிய முக்கிய அம்சங்களில் விரிவான விவாதத்தை மேற்கொள்வதற்காக, ஓஷன் 20 என்ற பெருங்கடல் 20  கூட்டத்தை நடத்த இந்தியாவின் ஜி20 தலைமை திட்டமிட்டுள்ளது. கடல் குப்பைகளை அகற்றுவதில் சமூகப் பங்கேற்பு மீதான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மே 21, 2023 அன்று கடற்கரையை சுத்தம் செய்யும் ஒருங்கிணைந்த நிகழ்வை இந்தியா நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

சுற்றுச் சூழல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகங்களின் செயலாளர்கள் இந்த விவாதங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கினர்.

இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் மேலும் பல பணிகளுக்காகவும் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்து செயல்பட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.





இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின்போது நடந்த விவாதங்களை மேலும் முன்னெடுத்துச்  செல்வது குறித்து 2023 மார்ச் 27 முதல் 29 வரை காந்திநகரில் நடைபெறும் 2வது பணிக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...