2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதற்காக சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவரை மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்த
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணைப் பெயரைக் குறிப்பிட்டு ஒரு இந்த பெயர் கொண்டவர்கள் எல்லாம் என்று கூறி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரது பேச்சு அந்தச் சமயத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாகப் பேசியதாக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.அந்த. வழக்கு நான்காண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா அமர்வில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது. காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்
வழக்கை விசாரித்த சூரத் நீதிபதி வர்மா பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தார். அதையடுத்து அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கினார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டணிக் கட்சியினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே என்னுடைய மதம். உண்மையே என் கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை.' என குறிப்பிட்டார். இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்ற மக்களவை கூடியபோது அதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். ஆனால், அவர் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் அவரது வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற மக்களவைச் செயலாளர் அறிவித்துள்ளார். அவர் மீதான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மற்றும் கபில்சிபல் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இராகுல் காந்தியின் பதவி பறிப்புத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு அவகாசமிருந்தும். அதை விட முக்கியமான அரசியலைப் பார்த்தால் இந்தத் தகுதி இழப்புச் சட்டம் வருவதற்கு முக்கியக் காரணம் ஒரு பின் நோக்கிய பார்வையில் இராகுல் காந்தியே தான்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தேர்தல்களில் போட்டியிட மேலும் 5 அல்லது 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
தமிழர்களின் வாழ்வையும், வரலாற்றையும் நசுக்க நசுக்க காங்கிரசின் வீழ்ச்சியை அரசியல் பாதையில் இயற்கை அழித்துக் கொண்டிருக்கிறதென்பதே உண்மை, அரசியல் பார்வையாளர்களின் கருத்தும் அதவே. பத்தாண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்திற்கு மூன்று மாத காலம் அவகாசமளிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது இன்று அவருக்கே வினையாகி விட்டதாம். இதை இன்றைய தினப் பத்திரிக்கைகள் உள்ளிட்ட பல செய்தி ஊடகங்கள் எழுதி, ராகுல்காந்தியை கிண்டல் செய்கின்றன!
ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் கிரிமினல்களுக்கு வாய்ப்புத் தரக் கூடாது என்பதற்காக! ஆனால், தன் விமர்சனத்தையே கிரிமினல் குற்றமாக்கும் என்பது தற்போது தான் தெரிகிறது, வருங்காலத்தில் ஆட்சிக்கு வந்து தன்னை தண்டிக்கக் கூடும் என அவர் நினைத்துப் பார்த்திருக்கக் கூட வழியில்லை.
ஆக, ராகுல் காந்தியின் நோக்கமென்பது வேறு! இப்போதய ஆட்சியாளர்களின் நோக்கம் என்பது வேறு.
அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது! ஏனென்றால், பாலியல் வன்கொடுமை, கொலைகள் போன்றவற்றை செய்தவர்கள் கூட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகிவிடும் சூழல் இருக்கிறது! அவர்கள் மீது குற்றப் பதிவு செய்வதே கடினமானது. அப்படியே பதிவு செய்தாலும் அது நீதிமன்றத்தில் நிருபிக்கப்படுவது அதைவிட சிரமமானது. இந்த நிலையில் நீதிமன்றம் தண்டனை வழங்கினாலே அதை கருத்தில் கொண்டு உடனடியாக பதவி நீக்கம் செய்யலாம். மீண்டும், மீண்டும் அவகாசம் தந்தால், சட்டத்தின் ஓட்டைகளில் குற்றவாளிகள் தப்பித்துவிடுவர் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தான் 2013 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை அறச் சீற்றத்துடன் கிழித்து எறிந்தார் ராகுல் காந்தி!
அந்த அறச் சீற்றத்தை அரசியல் அறியாதவர்களால் உணர முடியாது. 1983-84-இல் அதிமுக அரசை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்காக சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி வீழ்த்தியது. மக்கள் மன்றத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்று கண்ணீர் விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார் அப்போதய முதல்வர் காலம்சென்ற எம்.ஜி.ஆர்.
1974-ல் திருமதி இந்திராகாந்தி அவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மிசா அவசரகாலச் சட்டம் என்று நாடாளுமன்றத்தை முடக்கி, அடுத்த தேர்தலில் தோற்று அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்தார். பட்ட துயரங்களை மக்கள் மறந்தார்கள். ஆகவே
மக்கள் வரலாறு அறிந்து திருந்த வேண்டும் அதுவே அறம் வெல்லும் செயலாகும்
கருத்துகள்