முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பும்

2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில்  பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதற்காக சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவரை மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடந்த


நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணைப் பெயரைக் குறிப்பிட்டு ஒரு இந்த பெயர் கொண்டவர்கள் எல்லாம் என்று கூறி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அவரது பேச்சு அந்தச் சமயத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாகப் பேசியதாக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.அந்த. வழக்கு நான்காண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா அமர்வில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது. காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்  ராகுல் காந்தி இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் 

வழக்கை விசாரித்த சூரத் நீதிபதி வர்மா பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தார். அதையடுத்து அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கினார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டணிக் கட்சியினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே என்னுடைய மதம். உண்மையே என் கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை.' என குறிப்பிட்டார்.  இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்ற மக்களவை கூடியபோது அதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். ஆனால், அவர் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் அவரது வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற  மக்களவைச் செயலாளர் அறிவித்துள்ளார். அவர் மீதான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர்  மற்றும் கபில்சிபல் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இராகுல் காந்தியின் பதவி பறிப்புத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு அவகாசமிருந்தும். அதை விட முக்கியமான அரசியலைப் பார்த்தால்  இந்தத் தகுதி இழப்புச் சட்டம் வருவதற்கு  முக்கியக் காரணம்    ஒரு பின் நோக்கிய பார்வையில் இராகுல் காந்தியே தான்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தேர்தல்களில் போட்டியிட மேலும் 5 அல்லது 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
தமிழர்களின் வாழ்வையும், வரலாற்றையும் நசுக்க நசுக்க காங்கிரசின் வீழ்ச்சியை அரசியல் பாதையில்  இயற்கை அழித்துக் கொண்டிருக்கிறதென்பதே உண்மை, அரசியல் பார்வையாளர்களின் கருத்தும் அதவே. பத்தாண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதிகளின் தகுதி நீக்கத்திற்கு மூன்று மாத காலம் அவகாசமளிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது இன்று அவருக்கே வினையாகி விட்டதாம். இதை இன்றைய தினப் பத்திரிக்கைகள்  உள்ளிட்ட பல செய்தி ஊடகங்கள் எழுதி, ராகுல்காந்தியை  கிண்டல் செய்கின்றன!

ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் கிரிமினல்களுக்கு வாய்ப்புத் தரக் கூடாது என்பதற்காக! ஆனால், தன் விமர்சனத்தையே கிரிமினல் குற்றமாக்கும் என்பது  தற்போது தான் தெரிகிறது, வருங்காலத்தில் ஆட்சிக்கு வந்து தன்னை தண்டிக்கக் கூடும் என அவர் நினைத்துப் பார்த்திருக்கக் கூட வழியில்லை.
ஆக, ராகுல் காந்தியின் நோக்கமென்பது வேறு! இப்போதய ஆட்சியாளர்களின் நோக்கம் என்பது வேறு. 
 அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது! ஏனென்றால், பாலியல் வன்கொடுமை, கொலைகள் போன்றவற்றை செய்தவர்கள் கூட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகிவிடும் சூழல் இருக்கிறது! அவர்கள் மீது குற்றப் பதிவு செய்வதே கடினமானது. அப்படியே பதிவு செய்தாலும் அது நீதிமன்றத்தில்  நிருபிக்கப்படுவது அதைவிட சிரமமானது. இந்த நிலையில் நீதிமன்றம்  தண்டனை வழங்கினாலே அதை கருத்தில் கொண்டு உடனடியாக பதவி நீக்கம் செய்யலாம். மீண்டும், மீண்டும் அவகாசம் தந்தால், சட்டத்தின் ஓட்டைகளில் குற்றவாளிகள் தப்பித்துவிடுவர் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தான் 2013 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை அறச் சீற்றத்துடன் கிழித்து எறிந்தார் ராகுல் காந்தி!
அந்த அறச் சீற்றத்தை அரசியல் அறியாதவர்களால்  உணர முடியாது. 1983-84-இல் அதிமுக அரசை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்காக சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி வீழ்த்தியது. மக்கள் மன்றத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்று கண்ணீர் விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார் அப்போதய முதல்வர் காலம்சென்ற எம்.ஜி.ஆர்.




1974-ல் திருமதி இந்திராகாந்தி அவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மிசா அவசரகாலச் சட்டம் என்று நாடாளுமன்றத்தை முடக்கி, அடுத்த தேர்தலில் தோற்று அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்தார். பட்ட துயரங்களை மக்கள் மறந்தார்கள். ஆகவே 



மக்கள் வரலாறு அறிந்து  திருந்த வேண்டும்  அதுவே அறம் வெல்லும் செயலாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.