மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு -2023-க்கு தகுதியுடையவர் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு-2023-க்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிட விவரங்கள், வயது வரம்பு தேவையான கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வுமுறை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற பல்வேறு தகவல்கள் பணியிட அறிவிப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள் 03.05.2023 (23:00 P.M) மற்றும் ஆன்லைன் முறையில் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு கடைசிநாள்
04.05.2023 (23:00 P.M). தெற்கு மண்டலத்தில் கணினி முறையில் நடத்தப்படும் தேர்வு ஜுலை, 2023, 21 மையங்களில் நடைபெறும்: ஆந்திர மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறும்.
இந்தத் தகவலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைமான எஸ்எஸ்சி மண்டல இயக்குநர் திரு கே நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்