சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்களின் மகன்கள் பலி.
சென்னை தாம்பரம் அருகில் நங்கநல்லூர் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். நிலையில் நேற்று இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் அர்ச்சகர்கள் 25 பேர் இறங்கியதாகவும் அப்போது இரண்டு முறை சுவாமி சிலையையும் மூழ்க வைத்து அவர்கள் எடுத்ததாகவும்
மூன்றாவது முறை மூழ்கும்போது ஒரு அர்ச்சகர் மகனது கால் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற அர்ச்சகர்கள் பதறியபடி அவரை காப்பாற்ற முயன்றதில் சேற்றில் சிக்கிய அர்ச்சகர் மகன் உள்பட ஐந்து இளைஞர்கள் தத்தளித்து கொண்டே நீரில் மூழ்கியதால் உடனடியாகத் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் படகு மூலம் தேடியதில் ஐந்து அர்ச்சகர் மகன்களின் உடல்கள் மீட்கப்பட்டது.இந்த நிலையில் 5 அர்ச்சகர்களின் மகன்கள் உயிரிழந்த சம்பவத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 அர்ச்சகர்களின் மகன்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இறந்து போனவர்கள் அர்ச்சர்கள் அல்ல, அர்ச்சகர்களுக்கு உதவி செய்யப் போன கல்லூரி மாணவர்கள் அவர்களின் மகன்கள் நீச்சல் தெரியாதவர்களை உதவிக்கு அழைத்துப்போன அர்ச்சகர்கள் மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அறநிலையத்துறை இணைந்த தனியார் டிரஸ்ட் அமைப்பின் கீழ் இயங்கிவரும் சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலின் நிர்வாகக் குறைபாட்டால் இன்று உயிர் பலியாகியிருக்கிறது. எனவே அதை அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ள கோவில் தனியார் நிர்வாகமுடையது. அரசிடமோ அறநிலையத்துறையிடமோ இந்நிகழ்வு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இறந்தவர்கள் அர்ச்சகர்கள் அல்ல. நிகழ்வுக்கு உதவச்சென்ற அவர்களின் மகன்களான இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரழைக்கப்பட்டனர். அவர்கள் படகு மூலம் தேடியதில் முதலில் 4 நபர்களின் உடல்களை மீட்டெடுத்தனர்.
அப்போது ராகவன்(வயது18) சூர்யா (வயது 22) பானேஷ் (வயது 22) யோகிஸ்வரேன் (வயது 21) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் 5 ஆவதாக ஒருவரின் உடலும் கிடைத்தது. இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தீர்த்தவாரி கோவில் நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்களின் மகன்கள் உயிரிழந்த சம்பவம் அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்