முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய பல்வீர் சிங் உள்ளிட்ட நபர்கள் குற்றம் குறித்து விசாரிக்க உயர் அதிகாரி நியமனம்

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் 


அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம்

ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற எண்.69/2023 வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு. தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டனர்.


அதுதொடர்பாக அரசின் காவல் நிலை ஆணை 151-இன் கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26 மார்ச் 2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக பல்வீர் சிங்  29.மார்ச் .2023 ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், போக பூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், எம்.சந்தான குமார், தலைமைக் காவலர்,


அம்பாசமுத்திரம் காவல் நிலையம், வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர்  மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு,  முதற்கட்ட விசாரணை அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.ஏப்ரல் .2023 ஆம் தேதியன்று சமர்ப்பித்தார்.

நிலையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வர பெற்றதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04.ஏப்ரல் .2023 ஆம் தேதி தமிழ்நாடு அரசிற்குப் பரிந்துரை செய்தார். அதை  தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு விசாரணை அதிகாரியை நியமனம் செய்துள்ளது. அதில், பணியிடை நீக்கத்திலுள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஐபிஎஸ் மீதும், மற்ற காவல் அதிகாரிகள் பணியாளர்கள் மீதும் விசாரணை கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப் பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில்

பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப் பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணையை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  முதன்மைச் செயலாளர் பெ. அமுதா ஐஏஎஸ்ஸை அரசின் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.                  ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி மற்றும் அந்த கட்சிகளுக்கு முட்டு கொடுப்பவர்கள் என அனைவரும் பல்வீர்சிங் விஷயத்தில் கடும் மௌனத்தில் இருக்கின்றனர். தொலைக்காட்சி விவாதங்களும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதில் தான் கவனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து பேசி வரும் மீதம் உள்ள சில பத்திரிக்கையாளர்களையும் அமைதியாக்கும் முயற்சியிலும் உயர் அமைப்பு  இறங்கியுள்ளது குறித்து பலரும் புகார் கூறிய நிலையில். 

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது இது வரை ஒரு வழக்குக் கூட பதியப்படவில்லை. புகார் கொடுத்தவர்கள் கடத்தப்படுகிறார்கள் எனவும் புகார் கொடுக்க முன் வருபவர்கள் மிரட்டப் படுகிறார்கள் எனவும்,  விசாரணை கமிஷன் பொறுமையாக விசாரித்து அறிக்கை அளிக்கும் வரை இதற்கு ஒரு தீர்வு வராது என்ற நிலையில் தான் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விசாரணை உயர்  அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் பல்வீர்சிங் பல் உடைத்ததாக புகார் அளித்து பிறகு விசாரணை ஆணையத்தில் கீழே விழுந்து தான் என்னுடைய பல் உடைந்தது என்று  மாற்றிக் கூறியவரை கடத்தி வைத்துள்ளதெனவும்,

இந்த வழக்கில் காவலர்கள் தண்டிக்கப்பட்டால் இனி விசாரணைக்கு வருபவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கின் போக்கை மாறற சிலர் பேனர் அடித்து பல்வீர்சிங் ஒரு நல்லவர் வல்லவர் என்று விளம்பரம் கொடுக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கியுள்ளது பலர் அறிந்ததே,

இதில் தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த தமிழ்நாடு  முதல்வர் இந்த கடத்தல் சம்பவம் குறித்தும் சிறப்பு விசாரணை அதிகாரி  விசாரிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.