முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய பல்வீர் சிங் உள்ளிட்ட நபர்கள் குற்றம் குறித்து விசாரிக்க உயர் அதிகாரி நியமனம்

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் 


அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம்

ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற எண்.69/2023 வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு. தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டனர்.


அதுதொடர்பாக அரசின் காவல் நிலை ஆணை 151-இன் கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26 மார்ச் 2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக பல்வீர் சிங்  29.மார்ச் .2023 ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், போக பூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், எம்.சந்தான குமார், தலைமைக் காவலர்,


அம்பாசமுத்திரம் காவல் நிலையம், வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர்  மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு,  முதற்கட்ட விசாரணை அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.ஏப்ரல் .2023 ஆம் தேதியன்று சமர்ப்பித்தார்.

நிலையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வர பெற்றதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04.ஏப்ரல் .2023 ஆம் தேதி தமிழ்நாடு அரசிற்குப் பரிந்துரை செய்தார். அதை  தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு விசாரணை அதிகாரியை நியமனம் செய்துள்ளது. அதில், பணியிடை நீக்கத்திலுள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஐபிஎஸ் மீதும், மற்ற காவல் அதிகாரிகள் பணியாளர்கள் மீதும் விசாரணை கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப் பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில்

பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப் பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணையை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  முதன்மைச் செயலாளர் பெ. அமுதா ஐஏஎஸ்ஸை அரசின் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.                  ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி மற்றும் அந்த கட்சிகளுக்கு முட்டு கொடுப்பவர்கள் என அனைவரும் பல்வீர்சிங் விஷயத்தில் கடும் மௌனத்தில் இருக்கின்றனர். தொலைக்காட்சி விவாதங்களும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதில் தான் கவனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து பேசி வரும் மீதம் உள்ள சில பத்திரிக்கையாளர்களையும் அமைதியாக்கும் முயற்சியிலும் உயர் அமைப்பு  இறங்கியுள்ளது குறித்து பலரும் புகார் கூறிய நிலையில். 

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது இது வரை ஒரு வழக்குக் கூட பதியப்படவில்லை. புகார் கொடுத்தவர்கள் கடத்தப்படுகிறார்கள் எனவும் புகார் கொடுக்க முன் வருபவர்கள் மிரட்டப் படுகிறார்கள் எனவும்,  விசாரணை கமிஷன் பொறுமையாக விசாரித்து அறிக்கை அளிக்கும் வரை இதற்கு ஒரு தீர்வு வராது என்ற நிலையில் தான் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விசாரணை உயர்  அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் பல்வீர்சிங் பல் உடைத்ததாக புகார் அளித்து பிறகு விசாரணை ஆணையத்தில் கீழே விழுந்து தான் என்னுடைய பல் உடைந்தது என்று  மாற்றிக் கூறியவரை கடத்தி வைத்துள்ளதெனவும்,

இந்த வழக்கில் காவலர்கள் தண்டிக்கப்பட்டால் இனி விசாரணைக்கு வருபவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கின் போக்கை மாறற சிலர் பேனர் அடித்து பல்வீர்சிங் ஒரு நல்லவர் வல்லவர் என்று விளம்பரம் கொடுக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கியுள்ளது பலர் அறிந்ததே,

இதில் தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த தமிழ்நாடு  முதல்வர் இந்த கடத்தல் சம்பவம் குறித்தும் சிறப்பு விசாரணை அதிகாரி  விசாரிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...