முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறையில் சிக்கிய செட்டிநாட்டின் முக்கியமானவர் ஆதாரங்கள் பேசுகிறது

ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வாயிலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை. நிலக்கரிப் போக்குவரத்து ஊழல்


2018 ஆம் ஆண்டில்  அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சார்பில் ஊழலில் ஈடுபட்ட  தமிழ் நாடு  மின்சார வாரியத்தின்  ஊழியர்கள் மற்றும்  சௌத் இந்தியா கார்ப்பரேஷன்  நிறுவனத்திலும் நடத்தியுள்ள சோதனையில் பல முக்கியமான ஆவணங்களாக பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வைப்புத்தொகை ரூபாய் 360 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 



இதுவரை இந்தப் புகாரை விசாரிக்காமல் காலம் கடத்தியதுடன்  மறைத்த இந்த நிறுவனத்தைக் காப்பாற்றி அவர்களின் வைப்புத் தொகையான ரூபாய் 300 கோடியை திருப்பிக்  கொடுக்க 2022 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் குழு அமைத்து முடிவெடுக்கப் போட்ட திட்டத்தை தக்க சமயத்தில் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து  முதல தகவல் அறிக்கையை பரிவு செய்ததில் நேற்று முன்தினம் வரை சோதனையும் நடத்தப்பட்டது . நிலக்கரிப்  போக்குவரத்து ஊழல். எங்கே எப்படி நடந்தது? அது யார் ஆட்சியில் நடந்தது?  அதனால் அரசுக்கு எத்தனை கோடிகள் இழப்பு?ஆதாரங்களுடன் 


தமிழ்நாட்டில் ரூபாய் 3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் செய்தது போல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த சுமார் 50000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட அதானி மற்றும் சில நிறுவனங்கள் மீது ஆதாரங்களுடன் புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிந்து  தொடர்ந்து விசாரிக்காத நிலையில் பிரதமரின் ஒரு அறிவிப்பு சிபிஐ வட்டாரத்தில் சமீபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபிக்கு நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நன்கொடையாளர்கள் செய்த மோசடிகள் மீதும் சிபிஐ வழக்கும் தொடராது விசாரணையும் செய்யாது என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் பொது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் 


சிபிஐ அதானி மீது FIR போட்டு விசாரிக்குமா? என்ற வினா பலருக்கும் எழுகிறது. பிரதமர் அதானியை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடுவாரா? என்பதே எழுவினா

நிலக்கரி ஊழல்  908 கோடி ஊழலில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற அடிப்படை விஷயம் கூட சட்ட நிபுனர்கள் சொல்லித் தான் தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தது  முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்ட அடுத்த நாளே இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் ? அல்லது  இனியாவது நடக்க வேண்டும் அதில் 

கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் 908 கோடி ஊழலில் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  அதானி என்ற பெயரை கேட்டாலே மத்திய மாநில அரசுகளும், அதிகாரிகளும் ஒரு நடுக்கம்  காரணமாக ஓட்டம் பிடிக்கிறார்கள். அதை ஆதாரங்களுடன் கொடுத்த நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய CBI அதிகாரிகள் தயக்கம் காட்டக் காரணமாவது எது என்ற வினா இதுவரை எழாமல் இல்லை ஆனால் தற்போது தான் சிலர் மீது பாய்கிறது அந்தப் பாய்ச்சல் காரணமாக செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த சுவீகாரம் வந்த நபர் வசமாகவே ஆதரங்களுடன் அமலாக்கத்துறையில் சிக்கி விட்ட தகவல் வருகிறது அதை இனி வரும் நாட்களில் காணலாம்.எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என்று சண்டை போட்டுக் கொண்டு இருப்பவர்கள் கடைசி வரை வெட்டியாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். இதில் பொதுநீதி யாதெனில் :- ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒரு நாள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.