கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையில் சலுகைப் பயன் பெற
அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசின் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியதற்காக பல கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் பெர்னான்டஸ் ரத்தினராஜா, தலித் கிருஸ்தவ விடுதலை முன்னணித் தலைவர் பேராசிரியர் மேரிஜான், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேத்யூ, இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் மற்றும் பல கிறிஸ்தவப் பேராயர்கள் தங்கள் நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிவித்தனர்.
கருத்துகள்