ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தியாகராசர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும். முன்னால் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணை வேந்தரான ராதாவின் மகனுமான
கருமுத்து.கண்ணன் இன்று 23.மே.2023 செவ்வாய்கிழமை காலை காலமானார்கள். அவரது 70 ஆவது வயதில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஆத்திக்காடு தெக்கூர் கருமுத்து தியாகராஜன் செட்டியாருக்கும் அவரது இரண்டாம் மனைவி ராதாவுக்கும் பிறந்த மகன் கருமுத்து கண்ணன். தியாகராஜன் செட்டியார் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்லூரி ஆகியவற்றின் இயக்குநராகவும், தியாகராஜர் மில்ஸ், மீனாட்சி மில்ஸ், லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.கல்விச் சேவைக்காக அறியப்பட்டவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்காராக இருந்து வந்தார். அவரது ஆன்மிகப் பணியும் மக்களால் பாராட்டப்பட்டது,
அவரது பணிக் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் அதனாலேயே அடுத்தடுத்த ஆட்சிகள் மாறினாலும் இவர் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்தார்.
அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கம் இருந்தாலும் கூட அரசியல் சார்பற்றவராகவே அறியப்பட்டார்.
மதுரை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பல்வேறு சங்கங்களில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் இவர்களின் பொறியியல் கல்லூரி கலைக்கல்லூரிகளில் வசதியில்லாத மாணவர்களுக்கும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தமிழ்நாடு அரசின் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (மே 24) பகல் 2 மணியளவில் அவரது உடல் கோச்சடையில் நல்லடக்கம் நடைபெறுகிறது,
அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து. அன்னாரது ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் .வாசகர்கள் சார்பில் .பப்ளிக் ஜஸ்டிஸ்
கருத்துகள்