முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு


அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023 அன்று எகிப்து அமைச்சரவையில் உள்ள இந்தியப் பிரிவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு (2023) குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த இந்தியப் பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரிவு எகிப்து பிரதமர் திரு முஸ்தபா மத்பவுலி தலைமையில் பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது

எகிப்து பிரதமர் மத்பவுலியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியப் பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய துறைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்தியப் பிரதிகளிடமிருந்து நேர்மறையான கருத்துகள் வருவதை அவர்கள் பாராட்டினர். மேலும் பல துறைகளில் இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முழுமையான அரசு ரீதியிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார். மேலும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் எகிப்துடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். 


வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளங்கள், மருந்து, மக்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்து பிரதமர் மத்பவுலி மற்றும் ஏழு எகிப்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்:

எகிப்து மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் டாக்டர் முகமது ஷேக்கர் எல்-மர்காபி

எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சாமே ஷௌக்ரி

எகிப்து திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் திரு ஹாலா அல்-சயீத்

எகிப்து சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் ரனியா அல்-மஷாத்

எகிப்து நிதி அமைச்சர் டாக்டர் முகமது மாயித்

எகிப்து தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் அம்ர் தலாத்

எகிப்து தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு அகமது சமீர் ஆவர்.எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்எகிப்து நாட்டின் கிராண்ட் முஃப்தியுடன் (மூத்த மதத் தலைவர்) பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு அரசு முறைப் பயணத்தின் போது எகிப்தின் கிராண்ட் முஃப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.

கிராண்ட் முஃப்தி தமது சமீபத்திய இந்தியப் பயண அனுபவத்தைப் பிரதமரிடம் அன்புடன் நினைவுகூர்ந்தார், மேலும் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளையும் அவர் எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் கிராண்ட் முஃப்தி பாராட்டினார்.

சமூக மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.


எகிப்தின் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் தார்-அல்-இஃப்தாவில் தகவல் தொழில்நுட்ப உயர்  திறன் மையத்தை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய வல்லுநருமான திரு. தாரெக் ஹெக்கியுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான திரு. தாரெக் ஹெக்கி சந்தித்தார்.

உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் இரண்டு முக்கிய இளம் யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் சந்தித்தனர்



யோகாவின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை ஊக்குவித்தார். எகிப்தில் மக்களிடம் உள்ள யோகா மீதான மிகப் பெரிய ஆர்வத்தை அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது

கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர்  திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.



எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்.பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது

கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர்  திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.

எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்