முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20 கூட்டம்

சென்னையில் பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20 கூட்டம்


ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால்  ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு பிரத்யேக பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த கூட்டம் ஜி 20 நாடுகள் மற்றும் அவற்றின் தலைமை, சர்வதேச அமைப்புகள் மற்றும் அறிவுசார் கூட்டாளர்களை ஒன்றிணைத்து, பணிக்குழுவின் முன்னுரிமை பகுதிகள் தொடர்பான பகிரப்பட்ட கடமைகள் மற்றும் முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதில் ஈடுபடும். இந்தப் பகுதிகளில் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், பேரழிவு மற்றும் பருவநிலை நெகிழ்திறன் உள்கட்டமைப்பு, பேரழிவு அபாயத் தணிப்புக்கான நிதி கட்டமைப்பு, பேரழிவு மீட்பு  அமைப்பு மற்றும் பேரழிவு அபாயத் தணிப்புக்கான சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவை அடங்கும்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி திருமதி மாமி மிசுடோரி, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அமைப்புகள் மற்றும் உத்திகளுக்கான துணைத் தலைவர் டாக்டர் ராதித்யா ஜாதி, புதுதில்லியில் உள்ள பிரேசில் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு பெட்ரோ பியாசி டி சோசா, ஜி 20 ஷெர்பா தூதர் திரு அமிதாப் காந்த் ஆகியோரின் பங்கேற்பு  பேரழிவு அபாயத் தணிப்பை ஊக்குவிப்பதற்கும், நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்குமான உறுதிப்பாட்டை அர்ப்பணிக்கும்.

அனைவராலும் அங்கீகரிக்கப்படும் அறிக்கை, ஜி 20 நாடுகளுக்கு ஒரு முக்கிய வழிகாட்டும் ஆவணமாக செயல்படும். இது பேரழிவு அபாயத் தணிப்பின்  முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகளை இது கோடிட்டுக் காட்டும்.  முடிவுகளை எடுப்பதில் பேரழிவு அபாயத் தணிப்பை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும். பேரழிவுகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஜி 20 நாடுகளின் ஒத்துழைப்பில் பேரழிவு அபாயத் தணிப்பை பிரதானப்படுத்த வேண்டும்.

தொழில்நுட்ப அமர்வுகளுக்கு இடையே, தேசிய பேரிடர் மேலாண்மை  நிறுவனம் (என்ஐடிஎம்), பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சிடிஆர்ஐ) மற்றும் ஐ.நா. பெண்கள் போன்ற அறிவுசார் முகவர்களால் பக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.  உள்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புவதற்கும், பேரழிவைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், பெண்கள் தலைமையிலான மற்றும் சமூக அடிப்படையிலான பேரழிவு அபாயத் தணிப்பை மேம்படுத்துவதற்கும் மீள்திறன்  ஈவுத்தொகையைப் பெறுவதில் பக்க நிகழ்வுகள் கவனம் செலுத்தும்.

ஜி 20 பிரதிநிதிகள் மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பார்வையிடவும், பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் பேரழிவுகளின் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.

பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழுவின் (டி.ஆர்.ஆர்.டபிள்யூ.ஜி) மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்க கூட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜூலை 23 அன்று 'சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரழிவு அபாயத் தணிப்பில் அவற்றின் பயன்பாடு' குறித்த ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்படட்டுள்ளது, இது டி.ஆர்.ஆர்.டபிள்யூ.ஜிக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்த ஆழமான புரிதலைப் பகிர்ந்து கொள்ளும். ஃபெமா, இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (பி.என்.பி.பி), என்.டி.எம்.ஏ இந்தியா, தேசிய புனல் மின் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மைக்ரோசாப்ட் இந்தியா, தமிழக அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற அதிகாரிகள் குழு விவாதத்தில் அங்கம் வகித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்