நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒரு அனுப்பியது.
தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் "நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது எனவும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். இந்தக் கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாகக் கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று”. எனக் கூறப்பட்டுள்ளது." இந்த நிலையில் கொதித்த நடிகர் நான் மன்னிப்புக் கேட்கிற ஜாதியா?
நடிகர் சங்கத்துக்கு இன்னும் நான்கு மணி நேரம் டைம் தர்ரேன், அதுக்குள்ள என்னைப் பத்தி வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறவேனும் நான் எரிமலையாக வெடிக்க ஆரம்பிச்சா எல்லாரையும் கோவணத்தோட ஓட விட்டுருவேன்,
நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேனென்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர வேண்டும் . நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யாரென்பது தெரியும்
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கி என்னை அரசியல் ரீதியாக ஒழிக்கப் பார்க்கிறார்கள். குறிப்பாக திரிஷா இனிமேல் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னது எனக்கு வருத்தத்தை, ஏற்படுத்தியுள்ளது. நான் அந்த அளவிற்கு மோசமான ஆளா.? இப்பதான் ஏன்டா லியோ படத்தில் நடித்தோமென்று இருக்கு . பேசாம அந்தப் படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் . மேலும் நான் தப்பு செய்தால் தானே மன்னிப்புக் கேட்க முடியும் .
நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா.? இது குறித்து நடிகர் சங்கத்திடம் நான் பேசியிருக்கிறேன், அங்கு திரிஷாவை வர வைத்து நான் பேசிய உண்மையான வீடியோவை போட்டுக் காட்டுவேன். அப்போது தான் திரிஷாவுக்கும் , மற்றவர்களுக்கும் உண்மை புரியும்
என நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் தெறிவித்தார். அப்போது நான்கு மணி நேரத்தில் நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பைத் திரும்பப் பெற வேண்டும். என்னை அழைத்து என்ன நடந்ததெனக் கேட்க வேண்டும். இது தான் என் கோரிக்கை எண்றார். இதில் பொது நீதி யாதெனில் குடும்பப் பெண்கள் போல திரைப்பட நடிகைகள் சித்தரிக்கப்படுவது இங்கு ஒரு சமூக வேதனை, நடிகைகள் போலித்தனமாகப் பாதித்தால் அதை கையிலெடுக்கிறது ஒரு அரசியல் கட்சி அது மிகவும் அபத்தமானதென பல சமூக ஆர்வலர்களின் கருத்திலும் நியாயம் உள்ளது
சினிமா நடிகைகளின் வாழ்வியலும், குடும்பப் பெண்களின் வாழ்வியலும் வேறுவேறானது, மகளிர் ஆணையம் குடும்பப் பெண்களின் பாதிப்பை வேடிக்கைபார்ப்பதும் நடிகைகளின் பாதிப்பில்லாத விபரங்களை முன்னிருத்துவதும் சமீப காலங்களில் அதிகமாகக் காரணம் எது என்பதை நாம் அறிவோம், ஆனால் பொதுஜனம் அறியா நிலை, ஆகவே சமூக ஊடக விவாதம் அதிகமாகிறது.. திரிஷாவின் விவகாரம் பெரிதாகக் காரணம் அரசியல், தான்,
கருத்துகள்