விஸ்வபிரியா நிதி நிறுவன இயக்குநரும், 'சுபிக்ஷா' சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு இருபதாண்டுகள் சிறை
நிதி நிறுவன மோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் & செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக 587 முதலீட்டாளர்களிடம் ரூபாய்.47.68 கோடியை மோசடி செய்ததாக வழக்கின் தீர்ப்பில்
இயக்குநர் 'சுபிக்ஷா' சுப்பிரமணியனுக்கு இருபதாண்டுகள், இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு நான்காண்டுகள், மற்றம் உள்ள இயக்குநர்கள், ஊழியர்களென ஒன்பது பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை
தலைமறைவான இயக்குனர் அப்பாதுரையை தேடப்படும் குற்றவாளியென அறிவிப்பு செய்தது,
தண்டிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய்.191.98 கோடி அபராதம் விதிப்பு - அபராதத் தொகையில் ரூபாய்.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் உத்தரவு.
சுபிக்ஷா மளிகை் பொருட்கள், காய்கனிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்களை விற்பனை செய்யும் 1600 விற்பனை நிலையங்களைக் கொண்ட சில்லறை வணிக நிறுவனமாகும் .1997 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது, நிதி முறைகேடு மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக 2009 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. காரணம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ரூபாய்.47.68 கோடியை மோசடி செய்த விஸ்வபிரியா பைனான்ஸ் நிதி நிறுவன இயக்குநராக சுபிக்ஷா சுப்பிரமணியன் இருந்தார். சென்னையில் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் டி.பாபு ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கருணாநிதி இன்று தீர்ப்பளித்தார்.
அதில், "இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு இருபதாண்டுகளும், இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு நான்காண்டுகளும், மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு தலா பத்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன். ரூபாய்.191 கோடியே 98 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதில் ரூபாய்.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டுத் தீர்ப்பு வந்தது.
கருத்துகள்