எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் பெயரில் நடிகை நமீதா கணவர் மோசடி இந்தப் புகார் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவரையுமஹ விசாரணைக்கு ஆஜராகுமாறு சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பியுள்ளனர்.
சேலத்தில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு நிறுவன ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டதில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் கலந்துகொண்டகூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி மற்றும் பா ஜ க ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தலைவ்ர் மஞ்சுநாத் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோரது கார், விசிட்டிங் கார்டு உள்ளிட்டவைகளில் இந்தியஅரசின் முத்திரை அசோகசக்கரம் சின்னத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காவல்துறைக்கு இரகசியப் புகார் சென்றதால், சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால் சாமி, எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் மீது பணம் மோசடி செய்தாதாகவும் ஒரு புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், எம்.எல்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலில் மாநில தலைவர் பதவியைத் அவருக்குத் தருவதாக் கூறி ரூபாய் நான்கு கோடி வரை பணம் கேட்டதாகவும், அதற்காக அவர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் ஐம்பது லட்சம் பணம் கொடுத்ததாகவும் , அந்த பதவியை நடிகை நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு அளித்ததை. அறிந்ததால் அவர் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் ரூபாய் ஒன்பது லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் ரூபாய் 41 லட்சத்தை ஏமாற்றிவிட்டதஸகப் புகார் அளித்திருந்தார்.
அதையடுத்து, எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ்வை காவல் துறையினர் கைது செய்த நிலையில் பின்னர், இவர்கள் இருவரையும் தமிழ்நாடு பா ஜ க மாநில வழக்கறிஞர் பிரிவின் தலைவர் பால் கனகராஜ் ஜாமீனில் எடுத்துள்ளார். எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் என்ற பெயரில் இப்படி வசூலிக்கப்பட்ட பணம் பா.ஜ.க ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் மஞ்சுநாத் மூலமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரைக்கு கொடுக்கப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் அரவிந்த் தாக்ஷன் எக்ஸ் பக்கத்தில் பரபரப்பாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, பா ஜ க ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் மஞ்சுநாத் மற்றும் நடிகை நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி உள்ளிட்ட பலரை விசாரணைக்கு ஆஜராகும்படி சேலம் மாநகர சூரமங்கலம் காவல் நிலையத்தின் சார்பில் சம்மன் அனுப்பினர்.
எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் பெயரில் மோசடி செய்து அந்தப் பணம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு அளிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மஞ்சுநாத்தை பா ஜ க-விலிருந்து நீக்கிவிட்டதாக நவம்பர் மாதம் 10-ஆம் தேதி பா ஜ க தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்